காத்திருந்த அதிர்ச்சி: காணாமல் போன மனைவியை ஒரு கோடி செலவில் தேடிய கணவர்!

  • IndiaGlitz, [Friday,July 29 2022]

ஆந்திராவில் விசாகப்பட்டினம் கடற்கரைக்கு மனைவியுடன் சென்ற கணவர், தனது மனைவி திடீரென காணாமல் போனதால், கடலில் விழுந்து இருக்கலாம் என்று நினைத்து கடலோர காவல்படைக்கு ரூபாய் ஒரு கோடி ரூபாய் செலவு செய்து மனைவியை தேடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்பின்னர் தான் அவரது மனைவி கள்ளக்காதலனுடன் ஓடியது தெரிய வந்ததை அடுத்து அவர் பெரும் அதிர்ச்சி அடைந்தார்.

விசாகப்பட்டினத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கும் சாய்பிரியா என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. கணவன் மனைவி இருவரும் நேற்று விசாகப்பட்டினத்தில் கடற்கரைக்கு சென்றனர். அப்போது கடற்கரையில் இருந்த சீனிவாசனுக்கு தொலைபேசி அழைப்பு வந்ததை அடுத்து அவர் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது கணவர் சீனிவாசன் கவனிக்காத நேரத்தில் திடீரென அவரது மனைவி சாய்பிரியா அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். தொலைபேசியில் பேசி முடித்தவுடன் மனைவியை காணவில்லை என்பதை அறிந்த கணவர் சீனிவாசன், சாய்பிரியா கடலில் விழுந்திருக்கலாம் என்று அச்சப்பட்டு காவல்துறைக்கு புகார் அளித்தார். இதனை அடுத்து ஒரு கோடி ரூபாய் செலவு செய்து கடலோர காவல்படையின் ஹெலிகாப்டரை வரவழைத்து கடல் முழுவதும் சாய்பிரியாவை தேடினர்.

இந்த நிலையில் சீனிவாசனுக்கு அவரது உறவினர் மூலம் தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் நெல்லூரில் சாய்பிரியா பத்திரமாக இருப்பதாக தெரிவிக்கப் பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் சாய்பிரியாவை விசாகப்பட்டினம் அழைத்து வந்து விசாரணை செய்தபோது ரவி என்ற நபரை தான் காதலித்ததாகவும் திருமணத்துக்கு பின்பும் அவருடன் பழகி வந்ததாகவும், கடற்கரைக்கு சென்றபோது கணவர் அசந்த நேரத்தில் அங்கிருந்து தப்பித்து காதலர் ரவியுடன் நெல்லூர் சென்றதாகவும் கூறியுள்ளார். காதலனுடன் சென்ற காதலியை தேடுவதற்கு ஒரு கோடி ரூபாய் செலவு செய்த கணவன் நொந்து போனதாக கூறப்படுகிறது.

More News

'நீங்க தான் ரியல் சூப்பர் ஸ்டார்': காவல்துறை அதிகாரியை பாராட்டிய ரஜினிகாந்த்!

காவல்துறை அதிகாரிகளை வீட்டிற்கு வரவழைத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் 'நீங்கள் தான் ரியல் சூப்பர் ஸ்டார்' என பாராட்டு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளன.

'கோமாளி' பட நாயகிக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் அனுமதி!

 ஜெயம் ரவி நடித்த 'கோமாளி' படத்தின் நாயகிகளில் ஒருவரான சம்யுக்தா ஹெக்டே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

தனது வீட்டில் திருடிய திருடனுக்கு நன்றி கூறி வீடியோ பதிவு செய்த பிரபல நடிகை!

பிரபல நடிகை ஒருவர் தான் ஆசை ஆசையாய் வளர்த்த நாய் திருடு போனதை அடுத்து கதறி அழுது இன்ஸ்டாகிராமில் வீடியோ போட்ட நிலையில் அந்த வீடியோவை பார்த்த உடன்  திருடன் செய்த செயல் பெரும் நெகிழ்ச்சியை

பிகினி புகைப்படத்தை வெளியிட்ட சாக்ஷி அகர்வால் அடுத்து செய்தது என்ன தெரியுமா? ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை சாக்ஷி அகர்வால் பிகினி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அவர் செய்த

விபச்சார வழக்கில் சிக்கி ஜாமினில் வெளிவந்த நடிகை மீண்டும் கைது!

விபச்சார வழக்கில் சிக்கி கைதான பிரபல நடிகை ஒருவர் ஜாமீனில் வெளிவந்த நிலையில் தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.