ருத்ரம்மாதேவியுடன் மோதுகிறாரா கோப்பெருந்தேவி?

  • IndiaGlitz, [Sunday,August 30 2015]

அனுஷ்காவின் சரித்திர கால படமான 'ருத்ரம்மாதேவி' வரும் செப்டம்பரில் ரிலீஸாகவும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் திகில் மற்றும் மர்ம படமான 'கோப்பெருந்தேவி' என்ற படமும் ருத்ரம்மாதேவிக்கு போட்டியாக செப்டம்பரில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோலிவுட்டில் வெற்றி பெற்று கொண்டிருக்கும் பேய்ப்படங்களின் வரிசையில் இன்னொரு படமாக வெளிவருகிறது 'கோப்பெருந்தேவி'. ஆராத்யா' என்ற அறிமுக நாயகி பேயாக நடித்திருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் ரிஷிகேஷ் அச்சுதன் சங்கர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் கோவை சரளா, ஊர்வசி, தேவதர்ஷினி, சிங்கபுலி, விடிவி கணேஷ், வெண்ணிற ஆடை மூர்த்தி, மற்றும் மனோபாலா உள்பட பலர் நடித்துள்ளனர்.

அடர்த்தியான காடு ஒன்றில் பல வருடங்களுக்கு முன் புதைந்தபோன புதையலை தேடி ஒரு டீம் செல்கிறது. ஆனால் அந்த புதையலை ஒரு பேய் பாதுகாத்து வருகிறது. பேயின் பாதுகாப்பையும் மீறி புதையலை அந்த டீம் எடுத்தார்களா? என்பதுதான் கதை. இந்த கதையை திகில், மர்ம முடிச்சுகளுடன் காமெடி கலந்து இயக்குனர் கொடுத்துள்ளார்.

More News

கமல்ஹாசனின் 'நம்மவர்' நடிகரின் ரீ எண்ட்ரி

உலக நாயகன் கமல்ஹாசனால் 'நம்மவர்' படத்தில் அறிமுகமான நடிகர் கரண் அதன்பின்னர் பல படங்களில் நாயகனாகவும், ஒருசில படங்களில் நாயகன்களுக்கு நண்பர்களாகவும் நடித்தார்.....

ஸ்ரீதேனாண்டாள் மூவீஸ் ரிலீஸ் செய்யும் அடுத்த பேய்ப்படம்

கோலிவுட்டில் தயாராகும் பேய்ப்படங்கள் அனைத்தையும் மொத்த குத்தகைக்கு எடுத்தது போல பிரபல நிறுவனமான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்'...

'10 எண்றதுக்குள்ள' படப்பிடிப்பு முடிந்தது. செல்பியுடன் பிரிந்த சமந்தா

விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வந்த '10 எண்றதுக்குள்ள' படத்தின் ராஜஸ்தான் படப்பிடிப்பை முடிந்துவிட்டு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர்...

சிம்புவை அடுத்து விஜய்யின் உதவியை பெற்ற கவுண்டமணி

இளையதளபதி விஜய்யின் உதவியால் சிம்புவின் 'வாலு' படம் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆகியுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே..

'புரூஸ் லீ'யில் ஒற்றுமையாகும் ஜி.வி.பிரகாஷ் - ராம்சரண் தேஜா

'டாலிங்' படத்தை அடுத்து ஜி.வி.பிரகாஷ் நடித்த 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' திரைப்படம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில்...