close
Choose your channels

ருத்ரம்மாதேவியுடன் மோதுகிறாரா கோப்பெருந்தேவி?

Sunday, August 30, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அனுஷ்காவின் சரித்திர கால படமான 'ருத்ரம்மாதேவி' வரும் செப்டம்பரில் ரிலீஸாகவும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் திகில் மற்றும் மர்ம படமான 'கோப்பெருந்தேவி' என்ற படமும் ருத்ரம்மாதேவிக்கு போட்டியாக செப்டம்பரில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோலிவுட்டில் வெற்றி பெற்று கொண்டிருக்கும் பேய்ப்படங்களின் வரிசையில் இன்னொரு படமாக வெளிவருகிறது 'கோப்பெருந்தேவி'. ஆராத்யா' என்ற அறிமுக நாயகி பேயாக நடித்திருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் ரிஷிகேஷ் அச்சுதன் சங்கர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் கோவை சரளா, ஊர்வசி, தேவதர்ஷினி, சிங்கபுலி, விடிவி கணேஷ், வெண்ணிற ஆடை மூர்த்தி, மற்றும் மனோபாலா உள்பட பலர் நடித்துள்ளனர்.

அடர்த்தியான காடு ஒன்றில் பல வருடங்களுக்கு முன் புதைந்தபோன புதையலை தேடி ஒரு டீம் செல்கிறது. ஆனால் அந்த புதையலை ஒரு பேய் பாதுகாத்து வருகிறது. பேயின் பாதுகாப்பையும் மீறி புதையலை அந்த டீம் எடுத்தார்களா? என்பதுதான் கதை. இந்த கதையை திகில், மர்ம முடிச்சுகளுடன் காமெடி கலந்து இயக்குனர் கொடுத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.