'சாமி 2' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்

  • IndiaGlitz, [Friday,September 07 2018]

விக்ரம் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'சாமி 2' திரைப்படம் செப்டம்பர் ரிலீஸ் என கடந்த சில நாட்களாக விளம்பரம் செய்யப்பட்டு வரும் நிலையில் படக்குழுவினர்களுக்கு நெருக்கமான ஒருவர் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார்.

அந்த டுவீட்டில் வரும் 20ஆம் தேதி 'சாமி'யின் தரிசனத்திற்கு தயாராக இருக்கவும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே 'சாமி 2' திரைப்படம் இம்மாதம் 20ஆம் தேதி வெளியாக அதிக வாய்ப்பு உள்ளது. இருப்பினும் இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வரும் வரை பொறுமை காப்போம்

ஏற்கனவே சிவகார்த்திகேயனின் 'சீமராஜா' செப்டம்பர் 13ஆம் தேதியும், மணிரத்னம் இயக்கிய 'செக்க சிவந்த வானம்' திரைப்படம் செப்டம்பர் 28ஆம் தேதியில் வெளியாகவுள்ள நிலையில் இந்த இரண்டு படங்களுக்கும் இடையில் செப்டம்பர் 20ஆம் தேதி 'சாமி 2' ரிலீஸானால் ரசிகர்கர்ளுக்கு தொடர் விருந்து கிடைக்கும் என்பது மட்டும் உறுதி

More News

இன்னிக்கு 'பேட்ட' நாளைக்கு 'கோட்டை': வைரலாகும் டுவீட்டுக்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படத்தின் டைட்டில் 'பேட்ட' என்று சற்றுமுன்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டில் அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் டுவிட்டரில் டிரெண்ட் ஆகிவிட்டது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 165வது படத்தின் மாஸ் டைட்டில் இதோ

அதன்படி சற்றுமுன் இந்த படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த படத்தின் மாஸ் டைட்டில் 'பேட்ட' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினி ரசிகர்களுக்கு ஒரே நாளில் டபுள் விருந்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் 'ரஜினி 165' படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளதால்

'தலைவர் 165' படத்தின் டைட்டில் ரிலீஸ் குறித்த அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'தலைவர் 165' படத்தின் இரண்டுகட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது

மாணவிகளின் குளியல் வீடியோவை எடுக்க உதவிய சக மாணவி: பெங்களூரில் தஞ்சை இளைஞர் கைது

பெங்களூரில் உள்ள ஒரு கல்லூரியில் ஹாஸ்டலில் உடன்படிக்கும் மாணவிகளின் குளியல் வீடியோவை ஒரு மாணவியின் உதவியுடன் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவு செய்த தஞ்சையை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.