நேர்மைக்காகப் புகழப்பட்ட சகாயம் ஐஏஎஸ் பணியில் இருந்து ஓய்வா???

  • IndiaGlitz, [Wednesday,January 06 2021]

மதுரைப் பகுதியில் நடைபெற்று வந்த மணல் மாஃபியாக்களை வெளி உலகிற்கு தெரியப்படுத்தியதன் மூலம் மக்கள் மனதில் பெரும் மதிப்பை பெற்றவர் சகாயம் ஐஏஎஸ். இவர் இதற்கு முன்பும் பல இடங்களில் கலெக்டராகப் பணியாற்றி தனது நேர்மையால் புகழப்பட்டு இருக்கிறார். இதன் மூலம் இளைஞர் மத்தியிலும் பெரும் எழுச்சி அலையை ஏற்படுத்தியவர். மேலும் இவரது அரசியல் வருகையைக் குறித்து ஊடகங்கள் எப்போதும் ஆர்வம் காட்டி வருகின்றன.

இவரது ஓய்விற்கு இன்னும் 3 ஆண்டுகள் இருக்கும் நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்து உள்ளார் என்ற தகவல் வெளியானது. ஆனால் இவரது விண்ணப்பம் குறித்து உடனடியாக முடிவெடுக்காத அரசு நிர்வாகம் இன்று சகாயம் ஐஏஎஸை பணியில் இருந்து விடுவித்து இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சகாயத்தின் விருப்ப ஓய்வுக்கு என்ன காரணம் எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தருமபுரி மாவட்ட பயிற்சி அதிகாரியாக தனது பணியைத் தொடங்கிய இவர் பல துறைகளில் நேர்மையான அதிகாரி என்ற பெயரை எடுத்து இருக்கிறார். நாமக்கல் மாவட்ட கலெக்டராக இருக்கும்போது தனது சொத்து விவரத்தை வெளியிட்டு ஊடகங்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அடுத்து மதுரை மாவட்ட கலெக்டராக பணியாற்றிபோது அங்கு நடைபெறும் மணல் கொள்ளை ஊழலை கண்டுபிடித்து பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதற்கான ஆதாரத்தை சமர்ப்பித்தார். இதனால் பல முக்கியப் புள்ளிகளின் எதிர்ப்பையும் மறைமுகமாக சம்பாதித்துக் கொண்டார்.

இந்தக் கட்டத்தில்தான் சகாயம் கோ ஆப் டெக்ஸ்ஸின் நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டார். ஒரு மூத்த ஐஏஎஸ் அதிகாரியை உயர் பதவிக்கு பயன்படுத்திக் கொள்ளாமல் இப்படி ஒதுக்கப்படுகிறாரே என்ற கேள்வி அப்போதே எழுப்பப்பட்டது. ஆனால் அந்தத் துறையிலும் சகாயம் சிறப்பாக செயல்பட்டு கைத்தறி துணிகள் விற்பனையில் சாதனை செய்து காட்டினார். அதோடு தமிழக இளைஞர்கள் மத்தியில் வேட்டி தினத்தைக் கொண்டாட வைத்தார்.

தமிழகத்தில் பேரிடர் காலங்களின்போது மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பணி ஒதுக்கப்பட்டு அவர்களின் ஆலோசனைகள் கேட்டுக் கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இதுபோன்று சகாயம் ஐஏஎஸை தமிழக தலைமைச் செயலகம் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான இவர் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெறுவதற்கு முடிவு எடுத்ததாக அவரது தரப்பினர் தெரிவித்து உள்ளனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் சயின்ஸ் சிட்டி எனும் தமிழ்நாடு அறிவியல் நகரத் துணை தலைவராக பணியாற்றி வந்த இவரது ஓய்வுக்கு இன்னும் 3 ஆண்டுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் விருப்ப ஓய்வு பெறுகிறார். இதனால், அடுத்து இவரின் வேலைத் திட்டம் என்னவாக இருக்கும் எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். பெரும்பாலும் இவரது தேர்வு அரசியலாகத்தான் இருக்கும் எனப் பல இளைஞர்கள் காத்துக் கொண்டு இருக்கின்றர். ஏற்கனவே இளைஞர்கள் மத்தியில் ஊழலுக்கு எதிரான தனது முழக்கத்தால் மதிக்கப்பட்டவர் அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

More News

புத்தாண்டு கொண்டாட்டம்: ஆலுமா டோலுமா பாடலுக்கு ஆட்டம் போட்ட அஜித்!

சமீபத்தில் உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது என்பதும் தமிழ் திரையுலகினர் பலரும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டது

தேர்தல் பிரச்சாரத்தில் ஆரி கோஷம் போட்ட ரசிகர்கள்: கமல் இன்ப அதிர்ச்சி!

பிக்பாஸ் வீட்டில் முதல் மூன்று வாரங்கள் அமைதியாக இருந்த ஆரி, அதன்பின் ஆட்டத்தை தொடங்கினார் என்பதும் அவர் தொடங்கிய ஆவேசமான ஆட்டம் தற்போது

வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருட்டு போய்விட்டதா? அப்போ இந்தத் தகவல் உங்களுக்குத்தான்…

வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டு விட்டால் அதற்கான பொறுப்பை யார் ஏற்பார்கள்? சம்பந்தப்பட்ட வங்கி அதைத் திருப்பி கொடுக்குமா? என்ற கேள்வி பலருக்கும் இருந்து வருகிறது

சோம் கேட்ட சரியான கேள்வி: ஒப்புக்கொண்ட ஆரி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரியை குறி வைத்து அனைத்து போட்டியாளர்களும் விளையாடி வருவதாக ஏற்கனவே கூறப்பட்டுள்ள நிலையில் இன்று குறை சொல்லும் டாஸ்கில் ஆரியை குறித்தே சக போட்டியாளர்கள் குறை கூறி வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி யார் யாருக்கு?? சுகாதாரத் துறையின் முக்கிய அறிவிப்பு!!!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி அவரசகால பயன்பாடுக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளது.