close
Choose your channels

சாய்பல்லவி 'ஐ லவ் யூ' சொல்ல விரும்பிய நடிகர்

Saturday, September 10, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மலையாள நடிகை சாய்பல்லவி என்றாலே அனைவருக்கும் 'மலர்' கேரக்டர்தான் ஞாபகம் வரும். அந்த அளவுக்கு 'பிரேமம்' படத்தில் அவர் மலர் கேரக்டராகவே வாழ்ந்தார்.
தற்போது அவர் தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். விரைவில் தமிழில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் நடிகர் சூர்யாவின் மிகத்தீவிர ரசிகை என்றும் அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கின்றதோ இல்லையோ ஒரே ஒரு முறையாவது அவரை நேரில் பார்த்து 'ஐ லவ் யூ' என்று சொல்ல வேண்டும் என்று விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் தனக்கு மிகவும் பிடித்த படம் மணிரத்னம் இயக்கிய 'கன்னத்தில் முத்தமிட்டால்' என்று அவர் கூறியுள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் 'காற்று வெளியிடை' படத்தின் நாயகியாக முதலில் பரிசீலிக்கப்பட்டவர் சாய்பல்லவி என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.