தன்னை போலவே உடை: குக் வித் கோமாளி' பவித்ராவை பாராட்டிய சமந்தா!

  • IndiaGlitz, [Friday,April 16 2021]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றவர்களில் ஒருவர் பவித்ரா என்பதும் அவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வைரலாகி வரும் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சமீபத்தில் ’தெறி’ படத்தில் சமந்தா அணிந்த காஸ்டியூம் போலவே பவித்ரா அணிந்த சேலை உடன் கூடிய புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வைரலானது. இதையடுத்து பவித்ரா இன்னொரு சமந்தாவா? அடுத்த சமந்தா பவித்ராதானா? என்று நெட்டிசன்கள் கமெண்ட்டுகளை பதிவு செய்து வந்தார்கள் என்ற செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்த நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பவித்ரா நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என்று பதிவு செய்துள்ளார். பவித்ராவுக்கு இந்த பாராட்டு நிச்சயம் மிகப்பெரிய சந்தோஷமாகத்தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது,

இந்த நிலையில் ’குக் வித் கோமாளி பவித்ரா தற்போது ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தில் சதீஷ் நாயகனாக நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

மாற்றுத் திறனாளிகளுக்கான டி20 போட்டியில் தமிழக வீரர்கள் வெற்றி… வாழ்த்தி மகிழும் நடிகர் கமல்ஹாசன்!

மாற்றுத் திறனாளிகளுக்கான டி20 கிரிக்கெட் போட்டி சமீபத்தில் துபாயில் நடைபெற்று முடிந்தது

தலைகீழாகத் தொங்கி வொர்க் அவுட் செய்யும் நடிகை சமந்தா… குவியும் லைக்ஸ்!

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றவர் நடிகை சமந்தா.

ஹாலிவுட்டிலும் திரைப்படம் தயாரிப்பேன்:  ஏ.ஆர்.ரஹ்மான்

இந்தியாவில் மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் திரைப்படம் தயாரிப்பேன் என ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் அவர்கள் தெரிவித்துள்ளார் 

இந்திய அணி ஒப்பந்தத்தில் நடராஜன் இடம்பெறாததற்கு இதுதான் காரணமா?

இந்திய கிரிக்கெட் அணியின் வருடாந்திர ஒப்பந்தத்தில் தமிழகத்தை சேர்ந்த யார்க்கர் கிங் நடராஜன் பெயர் இடம்பெறவில்லை என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது 

புதிய நோய்கள்… சென்னைக்கு புயல் பாதிப்பு… புத்தாண்டு குறித்த பஞ்சாங்கப் பலன்களால் பரபரப்பு!

தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி ஒவ்வொரு வருடமும் ராமேஸ்வரம் கோவில் சன்னிதானத்தில் பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்ச்சி அந்தக் கோவில் நிர்வாகம் சார்பாக நடத்தப்படுகிறது.