திரைப்படங்களில் நிறைவேறாதது, வெப்சீரிஸில் நிறைவேறியது: சமந்தா பரபரப்பு பேட்டி 

திருமணத்துக்கு பின்னர் பொதுவாக நடிகைகளின் மார்க்கெட் தலைகீழாக கவிழ்ந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் திருமணத்திற்குப் பின்னரும் பல வெற்றி படங்களில் தொடர்ந்து நடித்து வரும் நடிகை சமந்தா சமீபத்தில் அளித்த பேட்டியில் தனக்கு வில்லி வேடத்தில் நடிக்க ஆசை என்றும் ஆனால் இதுவரை எந்த திரைப்படத்திலும் வில்லி வேடம் தனக்கு கிடைக்கவில்லை என்றும் கூறினார்.

இந்த நிலையில் தனது ஆசையை திரைப்படங்கள் நிறைவேற்றாவிட்டாலும் வெப்சீரிஸ் நிறைவேற்றி உள்ளது என்றும் தற்போது நான் நடித்து வரும் வெப் சீரியலில் வில்லி வேடத்தில் நடித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் தான் நாகார்ஜுனா வீட்டு மருமகள் என்பதால் குடும்பத்தின் பெயர் கெடாத வகையில் கேரக்டர்களை தேர்வு செய்து கவனமாக நடித்து வருகிறேன் என்றும் அவர் கூறினார். மேலும் சவாலான வேடங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அப்படிப்பட்ட வேடங்களில் நடிக்க முடியுமா என்ற பயம் ஒரு பக்கம் உள்ளது என்று கூறியுள்ளார். அதே நேரத்தில் அந்த பயம்தான் எனக்கு நல்ல கேரக்டர்களை தேர்வு செய்ய உதவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமந்தா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

More News

மனோரமா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்கணும்: இளம் நடிகையின் ஆசை

தமிழ் திரை உலகின் சகாப்தம் ஆச்சி மனோரமா என்றால் அது மிகையாகாது. 1000 படங்களுக்கு மேல் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்த அவரது சாதனையை வேறு ஒரு நடிகையை முறியடிக்க முடியுமா

மொபைல் போன் சிக்னலுக்காக மலை உச்சியில் தங்கைக்கு குடிசை போட்டுக் கொடுத்த அண்ணன்!

தற்போது கொரோனா வைரஸ் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருப்பதால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து வருகின்றன.

மகன்களுடன் மொட்டை மாடியில் விளையாடும் தனுஷ்: வைரலாகும் புகைப்படம்

கொரோனா லாக்டவுன் நேரத்தில் பிசியாக இருக்கும் பல நடிகர் நடிகைகள் கடந்த நான்கு மாதங்களாக வீட்டில் சும்மாவே இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்புக்கு அனுமதி எதிரொலி: பிரமாண்ட படத்தின் படப்பிடிப்பு தேதி அறிவிப்பு!

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக இந்தியா முழுவதும் திரைப்பட படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு இருந்தது என்பது தெரிந்ததே.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி தெரிவித்த பிசி ஸ்ரீராம்: ஏன் தெரியுமா?

தமிழ் திரையுலகில் மட்டுமின்றி இந்திய திரையுலகிலேயே புகழ் பெற்றவர்கள் பட்டியலில் ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் பிசி ஸ்ரீராம் ஆகிய இருவருக்கும் இடமுண்டு என்பது குறிப்பிடத்தக்கது.