close
Choose your channels

திரைப்படங்களில் நிறைவேறாதது, வெப்சீரிஸில் நிறைவேறியது: சமந்தா பரபரப்பு பேட்டி 

Sunday, August 23, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திருமணத்துக்கு பின்னர் பொதுவாக நடிகைகளின் மார்க்கெட் தலைகீழாக கவிழ்ந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் திருமணத்திற்குப் பின்னரும் பல வெற்றி படங்களில் தொடர்ந்து நடித்து வரும் நடிகை சமந்தா சமீபத்தில் அளித்த பேட்டியில் தனக்கு வில்லி வேடத்தில் நடிக்க ஆசை என்றும் ஆனால் இதுவரை எந்த திரைப்படத்திலும் வில்லி வேடம் தனக்கு கிடைக்கவில்லை என்றும் கூறினார்.

இந்த நிலையில் தனது ஆசையை திரைப்படங்கள் நிறைவேற்றாவிட்டாலும் வெப்சீரிஸ் நிறைவேற்றி உள்ளது என்றும் தற்போது நான் நடித்து வரும் வெப் சீரியலில் வில்லி வேடத்தில் நடித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் தான் நாகார்ஜுனா வீட்டு மருமகள் என்பதால் குடும்பத்தின் பெயர் கெடாத வகையில் கேரக்டர்களை தேர்வு செய்து கவனமாக நடித்து வருகிறேன் என்றும் அவர் கூறினார். மேலும் சவாலான வேடங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அப்படிப்பட்ட வேடங்களில் நடிக்க முடியுமா என்ற பயம் ஒரு பக்கம் உள்ளது என்று கூறியுள்ளார். அதே நேரத்தில் அந்த பயம்தான் எனக்கு நல்ல கேரக்டர்களை தேர்வு செய்ய உதவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமந்தா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.