close
Choose your channels

குழந்தைகள் விஷயத்தில் சமந்தா எடுத்த அதிரடி முடிவு? குவியும் வாழ்த்துக்கள்..!

Sunday, November 26, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து பிரிந்து விட்ட நிலையில் தற்போது அவர் குழந்தைகள் விஷயத்தில் அதிரடி முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை சமந்தா, நாக சைதன்யாவை பிரிந்தவுடன் தற்போது அவர் மயோசிட்டிஸ் என்ற நோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவர் மறுமணம் செய்து கொள்வார் என்று கிசுகிசுக்கப்பட்ட நிலையில் இப்போது அவர் பிரதியுஷா என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம் இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

எனவே சமந்தா மறுமணம் செய்து கொள்ள வாய்ப்பே இல்லை என்றும் இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து அவர்களுக்காக வாழ திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா நடித்த ’குஷி’ கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அவர் தனது உடல் முழுமையாக குணமாகிய உடன் அமெரிக்க திரைப்படமான ’சென்னை ஸ்டோரிஸ்’ என்ற படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சில திரைப்பட வாய்ப்புகளை அவர் தற்காலிகமாக தவிர்த்து விட்ட நிலையில் முழு குணமானவுடன் மீண்டும் திரையுலகில் வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.