சமந்தாவின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது

  • IndiaGlitz, [Thursday,October 29 2015]

விஜய், விக்ரம், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை சமந்தாவின் நீண்ட நாள் கனவு, பழம்பெரும் நடிகை ரேவதியுடன் நடிக்க வேண்டும் என்பது. இந்த கனவு தற்போது நிறைவேறியிருப்பதாக சமந்தா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் இன்று கூறியுள்ளார்.

பாரதிராஜாவால் 'மண்வாசனை' படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் கமல், ரஜினி, உள்பட பலருடன் நடித்து கோலிவுட்டின் சிறப்பான நடிகை என்று பெயர் பெற்ற நடிகை ரேவதியுடன், சமந்தா தற்போது ஒரு நகைக்கடை விளம்பரத்தில் நடித்துள்ளார். இந்த விளம்பர படத்தின் போட்டோஷூட் நேற்று நடைபெற்றது.

இந்த விளம்பரத்தில் அவருடன் நடித்த படப்பிடிப்பு தனக்கு மிகவும் ஸ்பெஷலான ஷூட்டிங் என்று, சமந்தா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் சமந்தா தற்போது சூர்யாவுடன் '24', விஜய்யுடன் 'விஜய் 59', மகேஷ்பாபுவுடன் பிரமோத்சவம் ஆகிஅ படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'தூங்காவனம்' படத்தின் சென்சார் விபரங்கள்

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த் 'தூங்காவனம்' படத்தை இன்று சென்சார் அதிகாரிகள் பார்த்து கொண்டிருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தோம்...

'கபாலி'யால் வாழ்க்கையின் முதல் அனுபவத்தை பெற்ற இளம் நடிகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'கபாலி' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக ரஜினிகாந்த் உள்பட படக்குழுவினர் அனைவரும் மலேசியா சென்றுள்ளனர்...

சிம்புவின் 'இது நம்ம ஆளு' இசை வெளியீடு எப்போது?

'பசங்க' பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'இது நம்ம ஆளு' திரைப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின் சிம்பு-நயன்தாரா இணைந்து நடித்துள்ளனர்...

'கத்துக்குட்டி' இயக்குநருக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பாராட்டு விழா!

இயக்குனர் இரா.சரவணன் இயக்கிய 'கத்துக்குட்டி' திரைப்படம் ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று பாசிட்டிவ் விமர்சனங்களையும் பெற்ற நிலையில் இந்த படத்தின் இயக்குனருக்கு தமிழ்நாடு விவசாயிகள்....

சென்னை ஈசிஆர் சாலையில் சூர்யா-சமந்தாவின் படப்பிடிப்பு

கடந்த 1ஆம் தேதி வெளியான விஜய் நடித்த 'புலி' திரைப்படத்தின் பிரமாண்டமான செட்டுக்கள் அனைத்து சென்னை ஈசிஆர் சாலையில்...