ஏழை மக்களுக்கு உதவ சென்னையில் காய்கறி விற்ற சமந்தா

  • IndiaGlitz, [Saturday,September 01 2018]

திருமணத்திற்கு பின்னரும் நடிகை சமந்தா நடித்து வரும் அனைத்து படங்களும் வெற்றிப்படங்களாக இருந்து வரும் நிலையில் சமீபத்தில் 'இரும்புத்திரை' படத்தின் 100வது நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்தார்.

இந்த விழாவில் கலந்து கொண்ட பின்னர் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள ஒரு காய்கரி கடையில் உட்கார்ந்து நடிகை சமந்தா காய்கறி விற்றார். இந்த செய்தி அந்த பகுதியில் காட்டுத்தீயாக பரவியதால் சமந்தா கையினால் காய்கறியை வாங்க கூட்டம் அலைமோதியது. இந்த காயகறி விற்கும் பணத்தை அவர் ஏழை எளிய மக்களுக்கு கொடுக்கவிருப்பதாக செய்திகள் பரவியதால் சமந்தாவிடம் அதிக விலை கொடுத்து மக்கள் காய்கறி வாங்கி சென்றனர்.

சமந்தா காய்கறிகளை விற்றதால் ஒருசில நிமிடங்களில் அந்த கடையில் உள்ள அனைத்து காய்கறிகளும் விற்றுத்தீர்ந்தன. இதில் வசூலான தொகை முழுவதையும் சமந்தா ஏழை எளிய மக்களின் நலனிற்கு வழங்கியுள்ளார். ஏற்கனவே நடிகை சமந்தா 'பிரதியூஷா' என்ற அமைப்பின்மூலம் இதயநோய் பாதித்த பலருக்கு அறுவை சிகிச்சை செய்ய உதவி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமந்தா நடித்த 'சீமராஜா' மற்றும் 'யூடர்ன்' ஆகிய படங்கள் வரும் செப்டம்பர் 13ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

மீண்டும் தலைவி ஆன யாஷிகா: நடத்துங்க பிக்பாஸ், இது உங்கள் ஷோ

யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவை பிக்பாஸ் அடிக்கடி காப்பாற்றுகிறார் என்று பார்வையாளர்கள் மட்டுமின்றி கமல்ஹாசனே கடந்த வாரம் மறைமுகமாக கூறிவிட்டார்.

தனியார் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதி!

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த தேசம் இரண்டு கட்சிகளுக்கு இடையே சிக்கியுள்ளது: பிரபல நடிகரின் டுவீட்

கடந்த சில நாட்களாகவே மத்தியில் ஆளும் பாஜகவுக்கும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும் ரஃபேல்ஸ் போர் விமான ஒப்பந்தம் குறித்த சர்ச்சைகள் ஏற்பட்டு வருகிறது.

மனைவியுடன் கள்ளத்தொடர்பு: நண்பரை கொன்று வீசிய கணவர்

துணை நடிகை விஷ்ணுப்ரியாவின் காதலன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அவரது தந்தையால் கொடைக்கானலில் கொலை செய்த நிலையில் தற்போது அதே கொடைக்கானலில் மீண்டும் ஒரு கள்ளக்காதல் கொலை நடந்துள்ளது.

'வடசென்னை' படத்தின் இசையமைப்பாளர் தனுஷ்?

கோலிவுட் திரையுலகில் நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர், என பல பரிமாணங்களை கொண்டுள்ள தனுஷ் தற்போது இசையமைப்பாளராகவும் மாறியுள்ள தகவல் வெளிவந்துள்ளது.