close
Choose your channels

மனைவியுடன் கள்ளத்தொடர்பு: நண்பரை கொன்று வீசிய கணவர்

Friday, August 31, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

துணை நடிகை விஷ்ணுப்ரியாவின் காதலன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அவரது தந்தையால் கொடைக்கானலில் கொலை செய்த நிலையில் தற்போது அதே கொடைக்கானலில் மீண்டும் ஒரு கள்ளக்காதல் கொலை நடந்துள்ளது.

மதுரையை சேர்ந்த சீனுவாசனும் அதே பகுதியில் டீக்கடையில் வேலை செய்யும் மணிகண்டனும் நண்பர்கள் என தெரிகிறது. அந்த வகையில் சீனுவாசனின் வீட்டிற்கு அடிக்கடி வந்த மணிகண்டனுக்கும் சீனுவாசனின் மனைவிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதனை கேள்விப்பட்ட சீனுவாசன் மனைவியை கண்டித்துள்ளார். ஆனாலும் இந்த கள்ளக்காதல் தொடர்ந்ததை அறிந்த சீனிவாசன் ஆத்திரமடைந்து தனது நண்பர்களுடன் மணிகண்டனை கொடைக்கானலுக்கு அழைத்து சென்றார். அங்கு மணிகண்டனுக்கு மதுவை ஊற்றி கொடுத்து அடித்தே கொலை செய்து பிணத்தை கொடைக்கானல் மலையில் இருந்து 3000 அடி பள்ளத்தில் தூக்கி எறிந்துள்ளனர்.

இந்த நிலையில் மணிகண்டனை காணவில்லை என அவரது உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த போலீசார், மணிகண்டனை சீனுவாசனும் அவரது நண்பர்களும் சேர்ந்து கொலை செய்ததை கண்டுபிடித்து அவர்கள் அனைவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். உல்லாச சுற்றுலா பகுதியான கொடைக்கானல் கள்ளக்காதல் கொலைகளின் புகழிடமாகி வருவது அந்த பகுதியினர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.