முழுமையாக குணமாகும் முன்பே களத்தில் இறங்கிய சமந்தா.. வைரல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Thursday,January 05 2023]

நடிகை சமந்தா தற்போது மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் முழுமையாக குணமாகும் முன்பே அவர் மீண்டும் திரையுலகில் களத்தில் இறக்கி விட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

சமந்தா நடித்த ’யசோதா’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அவர் நடித்து முடித்திருக்கும் ’சாகுந்தலம்’ என்ற திரைப்படம் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ’சாகுந்தலம்’ படத்தில் தனது பகுதியின் டப்பிங் பணியை தொடங்கி உள்ளதாக சமந்தா, இதுகுறித்த புகைப்படத்துடன் கூடிய இன்ஸ்டாகிராம் பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

எனக்கு உண்மையான சிகிச்சை என்பது கலையில் ஈடுபடுவதுதான் என்றும் கலையில் தொடர்ந்து ஈடுபடுவதன் மூலம் நான் விரைவில் மீண்டு வருவேன் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சமந்தாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சமந்தா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் மோகன்பாபு, அதிதி பாலன், பிரகாஷ்ராஜ், கௌதமி, கபீர் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குணசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.

More News

இங்கே உண்மையான குற்றவாளி யார்? நயன்தாரா பட இயக்குனரின் ஆவேச கேள்வி

சமீபத்தில் கேரளாவில் மந்தி பிரியாணி சாப்பிட்ட நர்ஸ் ஒருவர் பரிதாபமாக பலியான நிலையில் இந்த சம்பவத்தின் உண்மையான குற்றவாளி யார் என நயன்தாரா பட இயக்குனர் கேள்வி எழுப்பி இருப்பது

த்ரிஷா, நயன்தாரா ரெண்டு பேருமே இல்ல.. இவர்தான் 'ஏகே 62' நாயகி?

அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான 'ஏகே 62' என்ற படத்தில் நாயகியாக நயன்தாரா நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திடீரென த்ரிஷா நடிப்பார்

பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த படம்.. இயக்குனர் பெயர் அதிகாரபூர்வ அறிவிப்பு!

 பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அருண்ராஜா காமராஜ் அடுத்த படத்தின் நாயகன், நாயகி குறித்த தகவல்!

தமிழ் திரை உலகில் பிரபல பாடகர் மற்றும் பாடல் ஆசிரியராக அறிமுகமான அருண்ராஜா காமராஜ் சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்த 'கனா' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனரானார் என்பதும் அந்த

காதலை வெளிப்படுத்த பயப்பட வேண்டாம்.. கிருத்திகா உதயநிதி டுவிட்டுக்கு என்ன அர்த்தம்?

காதலை வெளிப்படுத்த பயப்படவேண்டாம் என்றும் இயற்கையின் மகிமைகளில்  அதுவும் ஒன்று என்றும் கிருத்திகா உதயநிதி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் தற்போது அந்த டுவிட் வைரலாகி வருகிறது.