விஷால்-லிங்குசாமியின் 'சண்டக்கோழி 2' படப்பிடிப்பு தொடங்கும் தேதி

  • IndiaGlitz, [Saturday,July 29 2017]

நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத்தின் பணிகள், நடிகர் சங்கத்தின் பணிகளுக்கு இடையே 'துப்பறிவாளன்' மற்றும் 'இரும்புத்திரை' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் இயக்குனர் லிங்குசாமியின் இயகத்தில் 'சண்டக்கோழி 2' படத்திலும் அவர் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் 'சண்டக்கோழி 2' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த படத்திற்காக பிரமாண்டமான செட் தயாராக இருப்பதாகவும், இதில் 40 நாட்கள் படப்பிடிப்பை நடத்த இயக்குனர் லிங்குசாமி திட்டமிட்டுள்ளதாகவும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் நாயகியாக கீர்த்திசுரேஷ் நடிக்கவுள்ளார். மேலும் முதல் பாகத்தில் நடித்த மீரா ஜாஸ்மின் மற்றும் ராஜ்கிரன் ஆகியோர்களும் இந்த படத்தில் நடிக்கவுள்ளனர். டி.இமான் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

வெற்றிமாறனின் அடுத்த படத்தில் ரஜினிகாந்த்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கி வரும் 'காலா' படத்தில் நடித்து வருகிறார்...

ரஜினிக்காக 1450 கிமீ சைக்கிள் ஓட்டும் ஆர்யா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள '2.0' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது இரவுபகலாக போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷனும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது...

பிறவிக்கலைஞன் ராதாரவிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் கலையுலக வாரிசும், பிரபல வில்லன் மற்றும் குணசித்திர நடிகருமான ராதாரவிக்கு இன்று பிறந்த நாள். எந்த கேரக்டர் கொடுத்தாலும் ஊதித்தள்ளும் ஒரு முழுமையான பிறவிக்கலைஞனுக்கு இந்த பிறந்த நாள் இனிய நாளாக அமைய நமது நல்வாழ்த்துக்கள்...

ஓவியாவை அசிங்கப்படுத்துகிறதா பிக்பாஸ் டீம்?

கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசனை விட, அந்த தொலைக்காட்சியை விட அதிகமாக பேசப்படுவது ஓவியாதான். ஓவியாவுக்கு கிடைத்துள்ள இந்த எதிர்பாராத புகழ் பிக்பாஸ் குழுவினர்களே எதிர்பாராத ஒன்று...

கமல்ஹாசன் மகள் மதம் மாறிவிட்டாரா?

உலகநாயகன் கமல்ஹாசன் ஒரு பகுத்தறிவாதி என்பது அனைவரும் அறிந்ததே. கடவுள் நம்பிக்கை மட்டுமின்றி ஜாதி, மதம் ஆகியவைகளுக்கும் அவர் எதிரானவர்.