திருமணம் குறித்து மனம்திறந்த நடிகை ஸ்ருதிஹாசனின் காதலர் சாந்தனு… வைரலாகும் தகவல்!

  • IndiaGlitz, [Wednesday,February 23 2022]

உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளும் முன்னணி நடிகையுமான ஸ்ருதிஹாசன் மும்பையைச் சேர்ந்த பிரபல டூடுல் கலைஞர் சாந்தனு ஹசாரிகா என்பவரைக் காதலித்து வருவது ரசிகர்களுக்கு தெரிந்ததுதான். இந்நிலையில் திருமணம் குறித்து சாந்தனுவிடம் கேள்வி கேட்கப்பட்டபோது அவர் ஒரு சுவாரசியமான பதிலை அளித்துள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி சினிமாக்களில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பைத் தவிர இசையிலும் தீவிர ஆர்வம் கொண்டவர் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். இந்நிலையில் அவர் பிரபல டூடுல் கலைஞர் சாந்தனு ஹசாரிகாவை காதலித்து வருகிறார். மேலும் அவர்கள் மும்பையில் ஒன்றாக தங்களது நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இந்நிலையில் சாந்தனுவிடம் திருமணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டு இருக்கிறது.

அதற்கு பதிலளித்த சாந்தனு, இப்போதுதான் நாங்கள் டேட்டிங் செய்ய ஆரம்பித்துள்ளோம். நாங்கள் ஒருவரையொருவர் நேசிக்கிறோம். மேலும் கலை, இசை என பல வழிகளிலும் செல்வாக்கு செலுத்துதல் மற்றும் ஆடைகளை வடிவமைத்தல் போன்ற பல ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறோம். எனவே இது எங்கள் இருவருக்கம் ஒரு ஆக்கப்பூர்வமான பயணமாகும்.

மேலும் நாங்கள் இருவரும் படைப்பு குறித்து உரையாடுகிறோம். இது உண்மையில் ஊக்கமளிப்பதோடு முன்னோக்கி செல்லவும் உதவுகிறது. நான் எப்போதும் ஸ்ருதிஹசனால் ஈர்க்கப்பட்டதைப் போல அவரும் என்னால் ஈர்க்கப்பட்டதாக கூறியிருக்கிறார். இதுதான் எங்களுக்குள் இருக்கும் உறவு என்று தங்களது உறவுநிலையை பற்றி விளக்கியிருக்கிறார்.

மேலும் ஸ்ருதிஹாசனோடு இருப்பது குறித்து பேசிய சாந்தனு நாங்கள் இருவரும் சிறந்த நண்பர்களாகவே நடந்துகொள்கிறோம். இதனால் வேடிக்கையான விஷயங்களோடு கலையையும் இசையையும் பற்றி உரையாடிக் கொள்ள முடிகிறது. இது ஆக்கப்பூர்வமான உரையாடலாக இருக்கிறது. இது படைப்பாற்றலுக்கான தருணம். திருமணத்தைவிட இதைத்தான் நான் பெரிதாக நினைக்கிறேன் என்று சாந்தனு ஹசாரிகா பதிலளித்துள்ளார்.

இசை, படைப்பு, கலை குறித்து சாந்தனு ஹசாரிகா அளித்துள்ள இந்தப் பதில் ரசிகர்களிடையே கடும் ஆச்சர்யத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் காதலைவிடவும் சிறந்த கலைஞர்களாக இருக்கும் நடிகை ஸ்ருதிஹாசனுக்கும் சாந்தனுவிற்கு ரசிகர்கள் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

More News

4 மடங்கு அதிக வேகத்துடன் இயங்கும் ஸ்டைலிஷ் கார்… புது வரவு!

இந்தியாவில் லம்போகினி கார் நிறுவனம் புதுமாடல் கார் ஒன்றை

கோமாளி படத்தையே மிஞ்சிய சம்பவம்… சாதாரண சளியால் 20 வருட நினைவுகளை இழந்த சோகம்!

இங்கிலாந்து நாட்டில் பத்திரிக்கையாளராக பணியாற்றிவந்த பெண் ஒருவருக்கு சளி பிடித்து அதனால்

இப்படியும் ஒரு மனிதரா? சொத்துகளை ஊழியர்களுக்கு வாரிக் கொடுத்த முதலாளி!

இந்தியாவில் ஒருசில பணக்காரர்களே தொடர்ந்து தங்களது ஊழியர்களுக்குப் பரிசுகளையும் போனஸையும் வாரி வழங்கி வருகின்றனர்.

வனிதாவின் வெளியேற்றத்திற்கு பின் பிக்பாஸில் திடீர் திருப்பம்?

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியிலிருந்து ஏற்கனவே சுரேஷ் சக்கரவர்த்தி, சுஜா, ஷாரிக், அபினய் ஆகிய 4 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அக்ரிமெண்ட்டை என் வக்கீல் பார்த்து கொள்வார்: பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய வனிதா?

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து வனிதா வெளியேறி விட்டதாகவும், அக்ரிமெண்ட் இருக்கிறது அவ்வாறு வெளியேறக் கூடாது என்கிறது பிக்பாஸ் கூறியபோது 'அக்ரிமெண்ட்டை எல்லாம் என் வக்கீல்