சென்னை திரையரங்கில் 'குலுகுலு' திரைப்படம் பாதியில் நிறுத்தம்: என்ன காரணம்?

  • IndiaGlitz, [Friday,July 29 2022]

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக இருந்த நடிகர் சந்தானம் கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் சந்தானம் ஹீரோவாக நடித்த திரைப்படம் ‘குலுகுலு’. இந்த படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் முதல் காட்சி முடிந்தவுடன் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை சென்னை கோயம்பேடு அருகே உள்ள ஒரு திரையரங்கில் ‘குலுகுலு’ திரைப்படம் அதிகாலை காட்சி திரையிடப்பட்ட நிலையில் திடீரென பாதியில் படம் நிறுத்தப்பட்டது. இதுகுறித்த விசாரித்தபோது சில ரசிகர்கள் டிக்கெட் எடுக்காமல் திரையரங்கிற்குள் சென்றுவிட்டதாகவும், அதனால் டிக்கெட் எடுத்தவர்களுக்கு இருக்கை கிடைக்காததால் வாக்குவாதம் நடந்ததாகவும் இதன் காரணமாகவே படம் பாதியில் நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து திரையரங்க நிர்வாகிகள் டிக்கெட் எடுக்காதவர்களை திரையரங்கில் இருந்து வெளியேற்றிய பின்னர் மீண்டும் படம் திரையிடப்பட்டது. இதனால் சிறிது நேரம் திரையரங்க வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகத்தில் ரிலீஸ் செய்யும் இந்த படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் இந்த படம் சந்தானத்தின் வெற்றி படமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

More News

'பொன்னியின் செல்வன்' ரசிகர்களுக்கு ஜூலை 31ல் செம ட்ரீட்: மாஸ் அறிவிப்பு

 பிரமாண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் சுபாஷ்கரன் அவர்களின் லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'.

படிப்புங்கிறது பிரசாதம் மாதிரி, கொடுங்க, சாப்பாடு மாதிரி விக்காதீங்க: தனுஷின் 'வாத்தி' டீசர்

தனுஷ் நடித்த 'வாத்தி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது முழுவீச்சில் தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சற்று முன் இந்த படத்தின் அட்டகாசமான டீசர் வெளியாகி இணையதளங்களில்

தங்கர்பச்சானின் அடுத்த படத்தில் நடிக்கும் 2 பிரபல இயக்குனர்கள்!

தமிழ் திரையுலகில் தரமான மற்றும் மனதை உருக்கும் வகையில் கதையம்சம் கொண்ட படங்களை இயக்குபவர் தங்கர்பச்சான் என்பதும் இவர் இயக்கிய 'அழகி' 'சொல்ல மறந்த கதை' 'பள்ளிக்கூடம்

முதல்முறையாக ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணையும் பிரபல ஹீரோ: மும்பை நிறுவனத்தின் கதையா?

இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் முதல் முறையாக பிரபல ஹீரோ ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளதால் போலிவுட்டு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கணவருக்கு பாதபூஜை செய்த சூர்யா-கார்த்தி பட பிரபல நடிகை: எதற்காக தெரியுமா?

சூர்யா, கார்த்தி படங்கள் உட்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த நடிகை தனது கணவருக்கு பாத பூஜை செய்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள்