close
Choose your channels

தங்கர்பச்சானின் அடுத்த படத்தில் நடிக்கும் 2 பிரபல இயக்குனர்கள்!

Thursday, July 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகில் தரமான மற்றும் மனதை உருக்கும் வகையில் கதையம்சம் கொண்ட படங்களை இயக்குபவர் தங்கர்பச்சான் என்பதும் இவர் இயக்கிய ’அழகி’ ’சொல்ல மறந்த கதை’ ’பள்ளிக்கூடம் போன்ற படங்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தங்கர்பச்சான் இயக்கத்தில் அவரது மகன் ஹீரோவாக நடித்த ‘டக்கு முக்கு திக்கு தாளம்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸாக உள்ளது.

இந்த நிலையில் தங்கர்பச்சான் இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ’கருமேகங்கள் கலைகின்றன’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பூஜை இன்று கும்பகோணத்தில் நடந்த நிலையில் இந்த பூஜை குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்த படத்தில் யோகி பாபு ஹீரோவாக நடிக்க உள்ளார் என்பதும் இயக்குனர் இமயம் பாரதிராஜா மற்றும் கவுதம் மேனன் ஆகிய இரண்டு இயக்குநர்களும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகயிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.