ஜாக்கிசான் பாணியில் ஸ்டண்ட் காட்சிகள்: சந்தானத்தின் புதிய முயற்சி

  • IndiaGlitz, [Friday,June 07 2019]

நடிகர் சந்தானம் நடித்து வரும் 'டகால்டி' படத்தின் இரண்டு லுக் நேற்று இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த படத்தில் சந்தானம், மும்பையில் செட்டிலான தமிழ்ப்பையன் கேரக்டரில் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கு ஸ்டண்ட் இயக்குனராக பணிபுரியும் ஸ்டண்ட் சில்வா, முதல்முறையாக ஜாக்கிசான் பாணியில் காமெடியுடன் கூடிய ஸ்டண்ட் காட்சிகளை வைத்துள்ளார். இது சந்தானத்தின் புதிய முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு 70% முடிந்துவிட்டதாகவும், மும்பை மட்டுமின்றி சென்னை, புனே, ஆந்திரா, அம்பாசமுத்திரம், திருச்செந்தூர் உள்ளிட்ட இடங்களில் இந்த் படத்தின் படப்பிடிப்பு நந்துள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர் பெங்காலி மொழி நடிகை ரித்திகா சென் இந்த படத்தில் தமிழ்ப்பெண்ணாக நடித்துள்ளார்.

விஜய் ஆனந்த் இயக்கி வரும் இந்த படத்திற்கு விஜய் நரேன் இசையமைத்து வருகிறார். தீபக்குமார் ஒளிப்பதிவில், சுரேஷ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் யோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

'தளபதி 64' படத்தின் டீம் குறித்த அசத்தலான தகவல்

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.

ஸ்பானிஷ் மொழி த்ரில்லர் படத்தின் ரீமேக்கில் பாகுபலி நடிகை?

பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களின் மூலம் உலகம் முழுவதும் புகழ் பெற்ற நடிகை அனுஷ்கா, இந்த இரண்டு படங்களை அடுத்து 'பாகிமதி' என்ற ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்தார்.

ஜீப்பில் பயணம் சிம்பு-ஹன்சிகா! மீண்டும் இணைகிறார்களா?

ஹன்சிகா நடித்து வரும் 50வது திரைப்படமான 'மஹா' படத்தில் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார் என்பதும் அவரது காட்சிகள் சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது

நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்த ஏழை மாணவிக்கு சிவகார்த்திகேயன் உதவி!

+2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும் நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் எம்பிபிஎஸ் படிக்க முடியாத நிலையில் உள்ள பல மாணவ மாணவிகளில் ஒருவர் சஹானா.

நீங்க தற்கொலையா செய்விங்க! பா.ரஞ்சித்துக்கு பிக்பாஸ் பிரபலம் கேள்வி

நீட் தேர்வு தோல்வியால் மனமுடைந்து நேற்று இரண்டு மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.