close
Choose your channels

நீங்க தற்கொலையா செய்விங்க! பா.ரஞ்சித்துக்கு பிக்பாஸ் பிரபலம் கேள்வி

Thursday, June 6, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நீட் தேர்வு தோல்வியால் மனமுடைந்து நேற்று இரண்டு மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் இந்த சோகத்திலும் ஒருசிலர் அரசியல் செய்து வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது

இந்த நிலையில் நீட் குறித்தும், இந்த தற்கொலைகள் குறித்தும் கருத்து கூறிய இயக்குனர் பா.ரஞ்சித், 'நீட் தேர்வு படுகொலைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இப்போது ரிதுஶ்ரீ, வைசியா. எளியவர்களுக்கு கல்வி மறுப்பு நீட் என்ற கொள்கையை சட்டமாக கொண்டிருக்கும் மத்திய அரசு, அதை தடுக்க பலமில்லாத மாநில அரசு, இதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் நாம், இவர்கள் தான் இதை நிகழ்த்தியவர்கள்! என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் ரஞ்சித்தின் இந்த கருத்துக்கு பதிலளித்துள்ள நடிகையும் நடன இயக்குனரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவருமான காயத்ரி ரகுராம், 'உங்கள் படம் தோல்வியடைந்தால் நீங்கள் தற்கொலை செய்து கொள்ள நினைப்பீர்களா? அல்லது அடுத்து நல்ல படம் எடுக்க வேண்டும் என நினைப்பீர்களா? அல்லது படங்களை தடை செய்ய போராட்டம் நடத்துவீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.