தடைகளை உடை. புதிய சரித்திரம் படை. நடிகர் சந்தானம்

  • IndiaGlitz, [Thursday,January 19 2017]

சென்னை மெரீனா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் போராட்டத்திற்கு பல்வேறு திரையுலக நட்சத்திரங்கள் ஆதரவுக்கரம் நீட்டியுள்ள நிலையில் தற்போது நடிகர் சந்தானமும் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

அவர் இதுகுறித்து கூறியபோது, 'தமிழக மக்கள் அனைவருக்கும் எனது பண்பான வணக்கம். ஜல்லிக்கட்டு. இதைப்பற்றி நான் எதுவும் புதுசா சொல்லப்போவதில்லை. எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். ஜல்லிக்கட்டு என்பதை ஏறு தழுவுதல் என்றும் சொல்வார்கள். நம்முடைய பாரம்பரியமான வீர விளையாட்டு. இதை தடை செய்வதற்கு யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. இதை மறுபடி நடத்த வேண்டும் என்று போராடும் அனைவருக்கும் நான் ஆதரவு தருகிறேன். தடைகளை உடை, புதிய சரித்திரம் படை..வாழ்க தமிழ்

More News

இந்த போராட்டம் சத்யாகிரகத்தை ஞாபகப்படுத்துகிறது. பிரபல இசையமைப்பாளர்

ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்றும், பீட்டாவுக்கு தடை செய்ய வேண்டும் என்றும் சென்னை மெரீனாவில் இளளஞர்கள் நடத்தி வரும் போராட்டம் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் மூன்றாவது நாளாக தொடரந்து வருகிறது...

நடிகர் சங்கம் நடத்தும் மௌன அறவழி போராட்டத்தில் தல அஜித்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு கோலிவுட் திரையுலகில் இருக்கும் அத்தனை நட்சத்திரங்களும் ஆதரவுக்குரல் கொடுத்து வரும் நிலையில் நாளை அதாவது ஜனவரி 20ஆம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் மௌன அறவழி போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது...

போராட்டத்தை அடக்க ராணுவமா? சிம்புவின் வித்தியாசமான ஐடியா

இன்று தமிழகம் முழுவதும் கொழுந்துவிட்டு எரியும் ஜல்லிக்கட்டு போராட்டத்டை ஆரம்பித்த சிறுபொறிகளில் ஒருவர் நடிகர் சிம்பு என்று கூறினால் அது மிகையாகாது. ஜல்லிக்கட்டுக்காக முதன்முதலில் குரல் கொடுத்தவர்களில் ஒருவரான சிம்பு நேற்று இரவு 8 மணி முதல் தனது தி.நகர் வீட்டின் முன் அறப்போராட்டத்தை தொடங்கியுள்ளார்...

ஜல்லிக்கட்டு போராட்டம்: நடிகர் சங்கம் எடுத்த அதிரடி முடிவு

ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும் என்று தமிழகம் முழுக்க எழுச்சி போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் திரையுலகினர்களும் இந்த போராட்டத்தில் தமிழன் என்ற உணர்வுடன் பரிபூரண ஆதரவு கொடுத்து வருகின்றனர். மேலும் திரையுலகினர் தங்களை முன்னிறுத்தாமல் இளைஞர்கள் வெற்றி பெற வேண்டும் என்று உணர்வுடன் ஆதரவு கொடுத்து வருவது வரவேற்கத்தக்கதாக 

மாணவர்கள் போராட்டம் எதிரொலி: பிரதமரை சந்திக்கிறார் ஓபிஎஸ்

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று அலங்காநல்லூரில் பற்றிய சிறு நெருப்பு இன்று சென்னை மெரீனா வரை காட்டுத்தீயாக கொழுந்துவிட்டு எரிகின்றது.