சரத்குமார் நடிக்கும் முதல் வெப்சீரிஸ்: தயாரிப்பாளர், இயக்குனர் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Tuesday,July 06 2021]

திரை உலகில் பல்வேறு சாதனைகள் செய்த நடிகர் சரத்குமார் முதல் முதலாக ஓடிடி பிளாட்பாரத்திற்காக ஒரு வெப்தொடரில் நடிக்க உள்ளார். இந்த தொடர் குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.

ராதிகாவின் ராடான் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த வெப்தொடருக்கு ’இறை’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் என்பதும், மேலும் இந்த தொடரில் நடிக்க உள்ள நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த தொடரை இயக்க இருப்பவர் ராஜேஷ் எம் செல்வா என்பது குறிப்பிடதக்கது. இவர் ஏற்கனவே கமல்ஹாசன் நடித்த ’தூங்காவனம்’ மற்றும் கமல் தயாரிப்பில் விக்ரம் நடித்த ’கடாரம் கொண்டான்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் ஒரு ஆங்கில நாவலின் தழுவல் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் அதிகாரபூர்வ பூஜை சமீபத்தில் நடைபெற்று ஒரு சில காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்றதாகவும் விரைவில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

More News

ஒயிட் காஸ்ட்யூமில் ஐஸ்வர்யா தத்தாவின் உச்சகட்ட கிளாமர் புகைப்படங்கள் வைரல்!

பிக்பாஸ் சீசன் 2 போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான ஐஸ்வர்யா தத்தா உச்சகட்ட கிளாமர் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ரூ.96,700 மதிப்புள்ள ஏசி வெறும் ரூ.5900: அமேசானில் ஆர்டர் செய்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

அமேசான் இணையதளத்தில் ரூ.96,700 என்ற விலைக்கு விற்க வேண்டிய ஏசி ரூ.5900 என்ற விலைக்கு விற்பனை என அறிவித்துள்ளதை அடுத்து அந்த ஏசியை பலரும் ஆர்டர் செய்தனர்.

கொரோனாவில் இருந்து மீண்ட பின்பும், விடாமல் துரத்தும் மறதி நோய்… மருத்துவர்கள் அச்சம்!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அரிதாக மூளை பாதிப்பு ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் கூறி இருந்தனர்.

துருவ்-மாரிசெல்வராஜ் படம் தொடங்குவது எப்போது?

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படம் ஒன்று உருவாக இருப்பதாகவும் இந்த படத்தை இயக்குனர் பா ரஞ்சித் தயாரிக்க இருப்பதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

கார்த்தி படத்திற்காக ரூ.2 கோடியில் பிரமாண்ட செட்: விரைவில் படப்பிடிப்பு

நடிகர் கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கிவரும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் அது மட்டுமின்றி அவர் 'சர்தார்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே