நன்றி மறந்த கமல் முன்மொழியும் தலைவர் நமக்கு தேவையா? சரத்குமார்

  • IndiaGlitz, [Monday,October 05 2015]

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலின் தேதி நெருங்கி வருவதால் சரத்குமார் மற்றும் விஷால் அணியினர் தங்கள் அணியின் வெற்றிக்காக தீவிரமாக ஓட்டுவேட்டை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் நன்றி மறந்தவர் என்றும், அப்படிப்பட்ட ஒருவர் வழிகாட்டும் ஒரு சங்கத்தலைவர் எப்படி நல்லவிதமாக செயல்பட முடியும்? என்றும் சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

விஸ்வரூபம் படத்தின் பிரச்சனையின்போது நாட்டை விட்டு வெளியேற போகிறேன் என்று அவர் சொன்னபோது அவருக்காக இரவு நேரத்தில் சென்று அந்த படத்தின் பிரச்சனையை தீர்க்க உதவினேன். நான் மட்டுமின்றி எனது மனைவி ராதிகா, மற்றும் ராதாரவியும் அவருக்கு பக்கபலமாக இருந்தோம். அதேபோல் 'உத்தமவில்லன்' பட பிரச்சனையின்போதும் தொடர்ந்து 36 மணி நேரம் தூங்காமல் விழித்திருந்து பேச்சுவார்த்தை நடத்தி அந்த படம் ரிலீஸ் ஆக உதவினேன்.

'உத்தம வில்லன்' படத்தில் நான் நடிக்கவில்லை, லிங்குசாமியின் படத்திலும் நான் நடிக்கவில்லை. இருப்பினும் ஒரு அற்புதமான கலைஞனின் படம் ரிலீஸ் ஆகாமல் முடங்கிவிடக் கூடாது என்பதற்காக உழைத்த எனக்கு நன்றி கூட சொல்லாமல் நன்றி மறந்தவர் கமல். இவ்வாறு நன்றியில்லாதவர்கள் முன்மொழிகின்ற ஒரு தலைவர் நடிகர் சங்கத்திற்கு வந்து என்ன செய்யப் போகிறார் என்று கேட்கின்றேன்' என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

More News

தேர்தலுக்கு முன்பே வாக்குறுதியை நிறைவேற்றிய பாண்டவர் அணி

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாண்டவர் அணியும் சரத்குமார் அணியும் தங்கள் அணியின் வெற்றிக்காக தீவிரமாக செயல்பட்டு வருகின்றன...

பாண்டவர் அணியின் தேர்தல் வாக்குறுதிகள். முழுவிபரம்

பாண்டவர் அணி என்று கூறப்படும் விஷால் அணியினரின் தேர்தல் அறிக்கை சமீபத்தில் வெளியானது. இந்த தேர்தல் அறிக்கையில் மொத்தம் 42...

விஜய்யின் 'புலி'க்கு பாராட்டு தெரிவித்த 'நண்பன்' ஜீவா

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படம் கடந்த 1ஆம் தேதி ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில்...

'கத்தி'யை இந்தியில் தயாரிக்கின்றாரா ஏ.ஆர்.முருகதாஸ்?

விஜய் நடித்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான 'கத்தி' திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி...

அருள்நிதியின் 'டிமாண்டி காலனி' இடித்து தரைமட்டம்?

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான அருள்நிதியின் 'டிமாண்டி காலனி' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது....