ஊரை விட்டு ஓடுறேன்னு சொன்னவர் அரசியல் பேசுவது ஏன்? கமலுக்கு சரத்குமார் கேள்வி

  • IndiaGlitz, [Tuesday,August 29 2017]

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக பரபரப்பான அரசியல் கருத்துக்களை கூறி வரும் நிலையில் ஜெயலலிதா இருக்கும் வரை அமைதியாக இருந்துவிட்டு தற்போது மட்டும் அரசியல் பேசுவது ஏன்? என்று நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் கேள்வி கேட்டுள்ளார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 11வது ஆண்டுவிழா சேலத்தில் நடந்தது. இந்த விழாவில் பேசிய சரத்குமார் கூறியதாவது: இன்றைக்கு வீரமாக அரசியல் பேசும் கமல் 1996ஆம் ஆண்டு எங்கே சென்றிருந்தார். அன்று நடந்த ஊழல் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா? அல்லது பயமா? ஒரு படத்தில் நஷ்டமாகிவிட்டது என்பதற்காக ஊரைவிட்டி ஓடிப்போறேன்னு சொன்ன நீங்கள் ஏன் இன்றைக்கு அரசியல் பேசுறீங்கள். ஒரு கருத்தை எப்போது, எப்படி சொல்ல வேண்டும் என்பது கூட கமல்ஹாசனுக்கு தெரியாது. அவர் சொல்லும் கருத்துக்கள் பல புரியாமல் உள்ளது. நான் கூட அவருடைய கருத்துக்கு தெளிவுரை எழுதலாம் என்று நினைத்தேன்.

முதலமைச்சராக வருவதற்கு எல்லோருக்கும் ஆசை இருக்கலாம். ஆனால் அந்த பதவியை அடைய தகுதியும் கடுமையான உழைப்பும் தேவை. இந்த சரத்குமாருக்கு அந்த தகுதி இருக்கின்றது. சரத்குமாரை போல் கடுமையாக உழைத்தவர்கள் மட்டும் என்னை விமர்சனம் செய்ய தகுதி உடையவர்கள்

பத்திரிகை என்பது நான்காவது தூண். மக்களை திசை திருப்பாமல் ,டி.ஆர்.பி குறித்து கவலைப்படாமல் மக்களுக்கான உண்மையான தலைவர் குறித்து எழுதுங்கள். அந்த தலைவர் ஏன் சரத்குமாராக இருக்கக்கூடாது என்று எழுதுங்கள்' என்று சரத்குமார் பேசினார்.

More News

பிக்பாஸ் காஜலை மறந்துவிட்ட 'காலா' டான்ஸ் மாஸ்டர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'காலா' படத்தின் டைட்டில் பாடல், மற்றும் கிளைமாக்ஸ் பாடல் ஆகிய இரண்டு பாடல்களுக்கும் ரஜினிக்கு நடனப்பயிற்சி அளித்துள்ளார் நடன இயக்குனர் சாண்டி.

காலையில் எடப்பாடி, மாலையில் ஸ்டாலின்: அதிமுக ஆதரவு எம்.எல்.ஏக்களின் சந்திப்பு

தமிழக அரசியல் சூழ்நிலை கடந்த சில நாட்களாகவே பரபரப்பாக இருந்து வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு எம்.எல்.ஏக்களும் இன்று ஆட்சியை மாற்றும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக உள்ளதால் இதுவரை இல்லாத வகையில் எம்.எல்.ஏக்களுக்கு அதிக மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டுள்ளது.

முதலமைச்சராக பழனிச்சாமியை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால்..: நடிகர் செந்தில்

முதலமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமியையும், துணை முதலமைச்சர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தையும் அகற்ற வேண்டும் என்று தினகரன் அணியினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்...

நேற்று பிறந்த குழந்தைக்கு இன்று கடிதம் எழுதிய ஃபேஸ்புக் மார்க்

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் அவர்களை தெரியாத இளையதலைமுறையினர் இருக்க முடியாது...

அஜித்துக்கு அறிவுரை கூறிய மன்சூர் அலிகான்

தல அஜித் நடித்த 'விவேகம்' படத்திற்கு எந்த படத்திற்கும் இல்லாத வகையில் நேர்மறை மற்றும் எதிர்மறை விமர்சனங்கள் குவிந்து வருகின்றது. ஆனாலும் நெகட்டிவ் விமர்சனங்களையும் மீறி இந்த படத்தின் வசூல் சாதனை செய்து வருகிறது...