சரவணபவன் அதிபர் ராஜகோபால் காலமானார்

சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரவணபவன் அதிபர் ராஜகோபால் காலமானார்

இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் கிளைகொண்ட ஓட்டல் நிறுவனம் சரவணபவன். இந்த நிறுவனத்தின் அதிபர் ராஜகோபால் அவர்கள் ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரை கொலை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஆயுள்தண்டனை பெற்றார். இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இந்த நிலையில் ராஜகோபால் மகனின் வேண்டுகோளை ஏற்று ராஜகோபாலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து அவர் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி சற்றுமுன் அவர் காலமானதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
 

More News

அக்சராஹாசனின் கர்ப்பத்திற்கு உதவிய அம்மா

உலகநாயகன் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்சராஹாசன், அஜித்தின் 'விவேகம்' படத்தில் ஹேக்கராக நடித்த பின் அவர் தனது இரண்டாவது படமான விக்ரமின் 'கடாரம் கொண்டான்

கடுப்பேற்றிய சாக்சி, குத்தி கொலை செய்த லாஸ்லியா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய புரமோ வீடியோவில் கிச்சன் டீமில் உள்ள சாக்சி, இதய வடிவில் ஒரு சப்பாத்தி செய்து அதனை லாஸ்லியாவிடம் காண்பித்து,

உங்கள் ஆதரவு ஊக்கம் அளிக்கிறது: கமலுக்கு சூர்யா கடிதம்

நடிகர் சூர்யா சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து சில கருத்துக்களை தெரிவித்தார். இந்த கருத்துக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ, எச் ராஜா,

'இந்தியன் 2' படத்தில் இணைந்த அஜித், விஜய், சூர்யா பட நடிகர்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவிருக்கும்  திரைப்படம் 'இந்தியன்-2'. இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் நடைபெற இருக்கும்

அமலாபாலுக்கு பணம் மட்டுமே முக்கியம்: பெண் அரசியல்வாதி தாக்கு

அமலாபால் நடித்த 'ஆடை' திரைப்படம் வரும் 19ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்திற்கு பிரியா ராஜேஸ்வரி என்ற அரசியல்வாதி கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு