close
Choose your channels

ராகுல்காந்திக்கு எதிராக போட்டியிட்டவரின் வேட்புமனு நிராகரிப்பு!

Sunday, April 7, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஏற்கனவே அமேதி தொகுதியில் போட்டியிடும் நிலையில் கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவித்து, அதற்கான வேட்புமனுவையும் சமீபத்தில் தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் வந்து தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் ராகுல்காந்தியை வயநாடு தொகுதியில் தோற்கடிக்க கம்யூனிஸ்ட் கட்சியும் பாஜகவும் வலுவான வேட்பாளர்களை நிறுத்திய நிலையில் திடீரென சோலார் பேனல் மோசடியில் சிக்கிய சரிதா நாயரும் போட்டியிட்டார். இவர் போட்டியிட்டதால் இந்த தொகுதி பரபரப்பானது.

இந்த நிலையில் சரிதா நாயரின் வேட்புமனுவை இன்று தேர்தல் அதிகாரிகள் நிராகரித்தனர். சோலார் பேனல் மோசடி வழக்கில் சரிதா நாயர் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தவர் என்பதால் அவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல் சரிதா நாயர் வேட்புமனு தாக்கல் செய்த எர்ணாகுளத்திலும் அவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.