டிஜிபியை அடுத்து தலைமைச்செயலாளர், உளப்பிரிவு ஆணையர் கவர்னருடன் சந்திப்பு. என்ன நடக்க போகிறது?
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் சற்று முன்னர் டிஜிபி ராஜேந்திரன் அவர்களை சந்தித்து தமிழக சட்ட ஒழுங்கு, எம்.எல்.ஏக்களின் இருப்பிடம் குறித்து ஆலோசனை செய்தார்.
இந்நிலையில் தற்போது ஆளுநர் மாளிகைக்கு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உளவுப்பிரிவு கூடுதல் ஆணையர் தாமரைக்கண்ணன், ஆணையர் ஜார்ஜ் ஆகியோர்களும் வருகை தந்துள்ளனர். இவர்களிடம் கவர்னர் முக்கிய ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
அடுத்தடுத்து கவர்னர், தமிழக அரசு உயரதிகாரிகளை சந்தித்து வருவதால் அவர் தனது முடிவை மிக விரைவில் அறிவிக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.