ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக சசிகலா மீண்டும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

  • IndiaGlitz, [Thursday,January 21 2021]

 

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 10 கோடி அபராதம் விதிக்கப்பட்ட சசிகலா வரும் 27 ஆம் தேதி விடுதலை செய்யப்பட இருக்கிறார். இவரது வருகை தமிழக அரசியலில் பல மாற்றங்களையும் அழுத்தங்களையும் கொண்டுவரக் கூடும் எனக் கருதப்பட்டு வருகிறது. இந்நிலையில் விடுதலைக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் தருவாயில் நேற்று அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

இதனால் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் அவருக்கு முதற்கட்டமாக சிறை மருத்துவமனையில் சிகிக்கை வழங்கப்பட்டது. ஆனால் மூச்சுத் திணறல் அதிகரித்த நிலையில் நேற்று மாலை 5.45 மணிக்கு, மேல் சிகிச்சைக்காக பெங்களூரு பவுரிங்கு அரசு மருத்துவமனையில் தண்டனை கைதிகளுக்கான வார்டில் அனுமதிக்கப் பட்டார்.

அங்கு சசிகலாவிற்கு ஆன்டிஜென் கொரோனா பரிசோதனை செய்யப்படது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது. பின்னர் நடத்தப்பட்ட உடல் பரிசோதனையில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு சீராக இருந்தது என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். எனினும் ரத்ததில் ஆக்சிஜன் அளவு 84% இருப்பதாகவும் இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் கூறி சசிகலாவிற்கு அவசர சிகிச்சை பிரிவில் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் சசிகலாவிற்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் அதனால் சி.டி. ஸ்கேன் எடுக்கப்பட்டு மீண்டும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

More News

அமெரிக்காவின் 46 ஆவது அதிபரானார் ஜோ பிடன்… கையெழுத்திட்ட முக்கிய ஆணைகள் எவை?

அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக ஜனநாயகக் கட்சியைச் சார்ந்த ஜோ பிடன் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ரசிகர்களுக்கு ஷிவானியின் மெசேஜ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 80 நாட்களுக்கு மேல் ரசிகர்களின் அதிருப்தியை பெற்ற போட்டியாளர் ஷிவானி என்பதும் ஆனால் அதன் பின்னர் ரோப் டாஸ்க் மூலம் திடீரென தனது முழு திறமையும் காண்பித்து

30 வருட இனிய வாழ்க்கை: சுரேஷ் சக்கரவர்த்தியின் திருமண புகைப்படம் வைரல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான சுரேஷ் சக்ரவர்த்தி மிகவும் நகைச்சுவையாகவும் திறமையாகவும் இளவயது போட்டியாளர்களுக்கு சவாலாகவும் விளையாடினார்

போல்ட் அண்ட் பியூட்டிபுல் தோழியுடன் நான்: பிக்பாஸ் அனிதாவின் வைரல் பதிவு

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது என்பதும், இந்த சீசனில் ஆரி வின்னர் ஆகவும் பாலாஜி ரன்னராகவும் வெற்றி பெற்றார் என்பதையும் பார்த்தோம்

சமந்தாவை அடுத்து ஈஷா மையத்திற்கு சென்ற பிரபல தமிழ் நடிகை!

பிரபல தமிழ் தெலுங்கு நடிகை சமந்தா சமீபத்தில் கோவை அருகே உள்ள ஈஷா யோகா மையத்திற்கு சென்றார் என்பதும் அங்கு ஆதிசிவன் சிலை அருகே எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்திருந்தார் என்பதும் பார்த்தோம்