ரூ.50 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு. டிஐஜி ரூபாவுக்கு நோட்டீஸ்

  • IndiaGlitz, [Wednesday,July 26 2017]

சொத்துகுவிப்பு வழக்கில் சிறைதண்டனை பெற்று பெங்களூரு பார்ப்பன அக்ராஹர சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு ரூ.2 கோடி லஞ்சம் பெற்று சிறப்பு சலுகைகள் வழங்கியதாக கர்நாடக சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா, கர்நாடக சிறைத்துறை டிஜிபியாக இருந்த சத்யநாராயணராவ் மீது புகார் கூறியிருந்தார்.
இந்த புகாரை அடுத்து ரூபா வேறு பதவிக்கு மாற்றப்பட்டார் என்பதும் குற்றம் சாட்டப்பட்ட சத்யநாராயணராவ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் ஐபிஎஸ் அதிகாரி ரூபாவுக்கு, சத்யநாராயணராவ் தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தன் மீதான குற்றச்சாட்டு குறித்து மூன்று நாட்களுக்குள் ரூபா நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அவர் மீது ரூ.50 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு தொடரப்போவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

More News

திடீரென பதவியை ராஜினாமா செய்த முதலமைச்சர்: பெரும் பரபரப்பு

பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து கொண்டிருந்த நிலையில் முதல்வர் பதவியை நிதிஷ்குமார் ராஜினாமா செய்துள்ளார்

சிம்புவின் 'பில்லா 3' படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் யார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தல அஜித் நடித்த 'பில்லா' படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை அடுத்து சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் 'பில்லா 3' படம் உருவாகவுள்ளதாக சில மாதங்களுக்கு முன் செய்தி வெளியானது.

வெற்றிப்பட இயக்குனருடன் கைகோர்க்கும் சீயான் விக்ரம்

சீயான் விக்ரம் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் 'துருவ நட்சத்திரம்' படத்திலும், விஜய்சந்தர் இயக்கத்தில் 'ஸ்கெட்ச்; படத்திலும் நடித்து வருகிறார்

விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம்: ஐரோப்பியன் யூனியன் அதிரடி முடிவு

பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலில் இருந்து விடுதலைப்புலிகள் அமைப்பை 11 ஆண்டுகளுக்கு பிறகு ஐரோப்பிய ஒன்றிய தலைமை நீதிமன்றம் நீக்கியுள்ளது.

நெடுவாசல் போராட்ட மாணவர் குபேரன் ஜாமீனில் விடுதலை

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பட்டத்திற்கான மாணவர் குபேரன் என்பவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.