சிஸ்டம் சரியில்லை என புலம்புவதில் பயனில்லை! சத்யராஜ் மகள் பேட்டி

  • IndiaGlitz, [Friday,July 26 2019]

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா 'அக்சயா பாத்ரா' என்ற அமைப்பின் விளம்பரத் தூதுவர் என்பதும், மருத்துவத்துறையில் நடக்கும் முறைகேடுகள் பற்றி அதிகம் பேசியவர் என்பதும், நீட் தேர்வை எதிர்த்து குரல் கொடுத்தவர் என்பதும் தெரிந்ததே. அவர் தற்போது அரசியலுக்கு வர விருப்பம் உள்ளதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது.

அரசியலுக்கு வர விரும்புவது உண்மைதான். ஒரு அமைப்பை மேம்படுத்த வேண்டும் என்றால் நாம் அந்த அமைப்பில் இருந்தால்தான் சாத்தியம். வருங்கால தலைமுறைக்கு நல்ல ஆரோக்கியமான அரசியலை அறிமுகப்படுத்த வேண்டும். நான் மற்ற பிரச்சனைகளை விட உடல்நலத்தை, ஆரோக்கியத்தை முன்னிறுத்தப் போகின்றேன்.

இது சரியில்லை, அது சரியில்லை என புலம்புவதிலும் எந்தவித பலனும் இல்லை. சிஸ்டத்தில் நாமே நுழைத்து விட வேண்டியது தான். நேர்மையும் உண்மையும் அரசியலின் இரண்டு பக்கங்களாக மாறும் போது நாம் கனவு காணும் நாட்டை உருவாக்க முடியும். ஒரு தமிழ் மகளாக தமிழர்களின் ஆரோக்கியத்திற்காக அரசியலுக்கு வர விரும்புகிறேன் என்று திவ்யா அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் தான் அரசியலுக்கு வரவிருப்பதை தனது பெற்றோரிடம் கூறி விட்டதாகவும் அவர்கள் எப்போதும் தனக்கு அரவணைப்பு தருவார்கள் என்றும் ஒரு நாளும் தனது நல்லுணர்வுகளுக்கு அவர்கள் தடை சொல்லவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

100 கோடியை தாண்டிய மக்கள் இருக்கின்ற ஒரு நாட்டில் எனது முயற்சியால் எல்லாம் மாறி விடும் என்று சொல்லமுடியாது. இருப்பினும் எந்த பெரிய பாதைக்கும் முதல் அடி தான் காரணமாகிறது என்று திவ்யா அந்த பேட்டியில் மேலும் தெரிவித்தார்.

More News

சூர்யாவின் 'சூரரை போற்று' படத்தின் சூடான அப்டேட்

சூர்யா நடிப்பில் கேவி ஆனந்த் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள 'காப்பான்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது.

அசராமல் முத்தம் தந்தே அலங்காரம் செய்ய வேண்டும்: 'அகலாதே' பாடல் வரிகள்

அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியாகவிருக்கும்

'பொன்னியின் செல்வன்' படத்தில் இணைந்த மேலும் இரண்டு பிரபல நடிகைகள்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ள மல்டி ஸ்டார் திரைப்படமான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்துள்ளனர்.

பாத்ரூமில் வழுக்கி விழும் பட்டாக்கத்தி பைரவர்கள்

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றின் மாணவர்கள் இருவர் பட்டா கத்தியுடன் ஒரு அரசு பேருந்தில் ஏறி அங்கிருந்த சக மாணவர் ஒருவரை சரமாரியாக வெட்டிய சிசிடிவி

அஜித்தை சந்தித்தால்... ஆசையை வெளிப்படுத்திய ஐஸ்வர்யாராய்

அஜித்தை நேரில் சந்தித்தால் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்புவதாக முன்னாள் உலக அழகியும் நடிகையுமான ஐஸ்வர்யாராய் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.