close
Choose your channels

சிஸ்டம் சரியில்லை என புலம்புவதில் பயனில்லை! சத்யராஜ் மகள் பேட்டி

Friday, July 26, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா 'அக்சயா பாத்ரா' என்ற அமைப்பின் விளம்பரத் தூதுவர் என்பதும், மருத்துவத்துறையில் நடக்கும் முறைகேடுகள் பற்றி அதிகம் பேசியவர் என்பதும், நீட் தேர்வை எதிர்த்து குரல் கொடுத்தவர் என்பதும் தெரிந்ததே. அவர் தற்போது அரசியலுக்கு வர விருப்பம் உள்ளதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது.

அரசியலுக்கு வர விரும்புவது உண்மைதான். ஒரு அமைப்பை மேம்படுத்த வேண்டும் என்றால் நாம் அந்த அமைப்பில் இருந்தால்தான் சாத்தியம். வருங்கால தலைமுறைக்கு நல்ல ஆரோக்கியமான அரசியலை அறிமுகப்படுத்த வேண்டும். நான் மற்ற பிரச்சனைகளை விட உடல்நலத்தை, ஆரோக்கியத்தை முன்னிறுத்தப் போகின்றேன்.

இது சரியில்லை, அது சரியில்லை என புலம்புவதிலும் எந்தவித பலனும் இல்லை. சிஸ்டத்தில் நாமே நுழைத்து விட வேண்டியது தான். நேர்மையும் உண்மையும் அரசியலின் இரண்டு பக்கங்களாக மாறும் போது நாம் கனவு காணும் நாட்டை உருவாக்க முடியும். ஒரு தமிழ் மகளாக தமிழர்களின் ஆரோக்கியத்திற்காக அரசியலுக்கு வர விரும்புகிறேன் என்று திவ்யா அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் தான் அரசியலுக்கு வரவிருப்பதை தனது பெற்றோரிடம் கூறி விட்டதாகவும் அவர்கள் எப்போதும் தனக்கு அரவணைப்பு தருவார்கள் என்றும் ஒரு நாளும் தனது நல்லுணர்வுகளுக்கு அவர்கள் தடை சொல்லவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

100 கோடியை தாண்டிய மக்கள் இருக்கின்ற ஒரு நாட்டில் எனது முயற்சியால் எல்லாம் மாறி விடும் என்று சொல்லமுடியாது. இருப்பினும் எந்த பெரிய பாதைக்கும் முதல் அடி தான் காரணமாகிறது என்று திவ்யா அந்த பேட்டியில் மேலும் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.