பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து பிரபல நடிகர் திடீர் விலகல்

  • IndiaGlitz, [Friday,October 04 2019]

மணிரத்னம் இயக்கவுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் இந்தியாவின் முக்கிய நட்சத்திரங்கள் இணைந்துள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் முதல் தொடங்கவுள்ளது

இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரான பெரியபழுவேட்டையர் கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமான நடிகர் சத்யராஜ், திடீரென அந்த படத்தில் இருந்து விலகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

பொன்னியின் செல்வன்' நாவலை படித்தவர்கள் அந்த கேரக்டரின் உயரம், கம்பீரம் ஆகியவற்றுக்கு சத்யராஜ் மிகப்பொருத்தமாக இருப்பார் என்று கருத்து கூறி வந்த நிலையில் திடீரென அவர் இந்த படத்தில் இருந்து விலகியது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. மணிரத்னம் விதித்த ஒரு நிபந்தனைக்கு சத்யராஜ் ஒப்புக்கொள்ளாததால் சத்யராஜ் இந்த படத்தில் இருந்து விலகியதாக தெரிகிறது. இதே நிபந்தனை காரணமாகத்தான் அருண்விஜய் இந்த படத்தில் நடிக்கவில்லை என்றும் கூறப்பட்டது. அந்த நிபந்தனை என்னவெனில் '6 மாதங்கள் கால்ஷீட் வேண்டும் மற்றும் இந்த ஆறு மாதங்களில் வேறு எந்த படத்திலும் நடிக்க கூடாது என்பதுதான்

சத்யராஜூக்கு பதில் பெரியபழுவேட்டையர் வேடத்திற்கு மணிரத்னம் வேறு எந்த நடிகரை தேர்வு செய்வார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

சாண்டியை உணர்ச்சிவசப்பட்டு அழவைத்த பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன் போட்டியாளர்களின் உறவினர்கள் வருகை தந்த நிலையில் தற்போது நிகழ்ச்சி முடிவடையும் இறுதிக்கட்டத்தில் இருப்பதால்

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் அரவிந்தசாமி!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை 'தலைவி' என்ற டைட்டிலில் இயக்குனர் விஜய் இயக்கவுள்ளார் என்பது தெரிந்ததே.

மணிரத்னம் உள்பட 50 பேர் மீது தேசத்துரோக வழக்கு:

பிரதமர் மோடி தலைமையிலான அரசில் நாட்டில் பல்வேறு பகுதிகளில் மதத்தின் பெயரால் தாக்குதல் நடைபெற்று வருவதாகவும், இந்த தாக்குதல்களில் இருந்து நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும்

வெளியில வந்து எல்லாதையும் சொல்றேன்: அப்பாவை சமாதானம் செய்யும் லாஸ்லியா

பிக்பாஸ் வீட்டில் ஃபைனல் வரை வந்துவிட்ட லாஸ்லியா, இந்த சீசனின் டைட்டிலை வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கவினிடம் நெருக்கம் வேண்டாம் என அவரது தாய் மற்றும் தந்தை அறிவுரை கூறிவிட்டு

கமல்ஹாசன் பதிவு செய்த காந்தி டுவீட்

நேற்று முன் தினம் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை நாடு முழுவதும் கொண்டாடிய நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் சிலர் மகாத்மா காந்தி அவர்களின்