close
Choose your channels

இளம்பெண்ணை காருடன்  கடத்திய பள்ளி மாணவர்கள்: சென்னையில் பரபரப்பு

Wednesday, January 22, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையில் இளம்பெண் ஒருவரை பள்ளி மாணவர்கள் 3 பேர் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த மாங்காடு என்ற பகுதியில் ஒரு கார் வேகமாக சென்று கொண்டிருந்தது. அந்த கார் திடீரென ஒரு பள்ளத்தில் சிக்கியதை அடுத்து அந்த பகுதியில் இருந்தவர்கள் அந்த காரின் அருகே சென்று பார்த்தனர்

அப்போது காரின் உள்ளே ஒரு இளம் பெண் கதறி அழுதபடி இருந்ததாகவும், அவருடன் மூன்று பள்ளி மாணவர்கள் இருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர் இதனையடுத்து அந்த பெண்ணை மீட்ட பொதுமக்கள் இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை செய்தபோது மத்திய உளவு பிரிவு ஆய்வாளர் ஒருவரின் மகள் காரில் கடத்தப்பட்டது தெரிய வந்தது.

அந்த பெண்ணை கடந்த சில வருடங்களாக காதலித்த ஒரு பள்ளி மாணவன் தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து காரில் சென்ற பெண்ணை கடத்தியதாக தெரிகிறது. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பள்ளி மாணவர்களையும் சிறுவர் சீர்திருத்த சிறையில் அடைத்தனர். பின்னர் அந்த இளம்பெண் பத்திரமாக அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். பட்டப்பகலில் காரில் மூன்று பள்ளிமாணவர்கள் ஒரு இளம்பெண்ணை கடத்தி சென்றது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.