close
Choose your channels

அமெரிக்க பள்ளியில் பயங்கர துப்பாக்கி சூடு: 10 பேர் பரிதாப பலி

Saturday, May 19, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அமெரிக்க பள்ளியில் பயங்கர துப்பாக்கி சூடு: 10 பேர் பரிதாப பலி

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் என்ற மாகாணத்தில் உள்ள சாண்டே பே என்ற பள்ளியில் திடீரென மர்ம மனிதன் ஒருவன் நுழைந்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 9 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியர் பலியானதாகவும், பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் சம்பந்தமாக 17 வயது வாலிபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். முன்னதாக இந்த வாலிபர் துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பின்னர் தற்கொலைக்கு முயன்றதாகவும், ஆனால் தற்கொலை முயற்சி முறியடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டரில் கூறியபோது, 'டெக்சாசில் இருந்து கிடைக்கும் தகவல்கள் வருத்தம் அளிக்கின்றன என பதிவிட்டுள்ளார். இதேபோல் டொனால்ட் மனைவியும் இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து டுவீட்டை பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.