close
Choose your channels

அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணையும் அருண்விஜய்

Saturday, May 30, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல மலையாள இயக்குநர் அல்போன்ஸ் புத்தரன் அவர்கள் இயக்கிய ‘நேரம்’ மற்றும் ’பிரேமம்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் சூப்பர்ஹிட் வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. குறிப்பாக ‘பிரேமம்’ திரைப்படம் நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் ’பிரேமம்’ படத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் 5 ஆண்டுகள் கழித்து தற்போது அடுத்த படத்திற்கான பணியை தொடங்கி உள்ளார். இந்த புதிய படத்தை தமிழில் உருவாக்கவிருப்பதாகவும், அதில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி மற்றும் அருண் விஜய் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் திரைக்கதையை தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்

மேலும் இந்த படத்திற்காக மிகப்பெரிய பட்ஜெட் தேவைப்படுவதால் இந்த படத்தை அடுத்த கட்டத்தில் நகர்த்த முடியாமல் சில மாதங்கள் இருந்ததாகவும், ஆனால் தற்போது இந்த படம் விரைவில் தொடங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஊரடங்கு உத்தரவு முடிந்து இயல்பு நிலை திரும்பும் போது இந்த படத்தின் பணிகள் தொடங்கும் என்றும் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் கூறியுள்ளார். ஏற்கனவே தமிழில் பல வெற்றிப்படங்களை கொடுத்து வரும் அருண்விஜய், சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் இணைய இருப்பதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.