close
Choose your channels

'ஜெய்பீம்' விவகாரம்: சந்தானம் தெரிவித்த அதே கருத்தை கூறிய சீமான்!

Thursday, November 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடித்த ’ஜெய்பீம்’ திரைப்படம் ஒரு பக்கம் மிகப்பெரிய வெற்றிபெற்ற போதிலும் இன்னொரு பக்கம் இந்த படத்திற்கு சில சர்ச்சைகளும் எழுந்தன என்பதும் குறிப்பாக பாமக கட்சியை சேர்ந்தவர்கள் சூர்யா மற்றும் படக்குழுவினர்களுக்கு கண்டனத்தை தெரிவித்தனர் என்பது தெரிந்ததே.

ஒரு சிலர் சூர்யாவுக்கு நேரடியாக மிரட்டல் விடுத்தனர் என்பதும் இதனை அடுத்து ஒட்டுமொத்த திரையுலகமும் சூர்யாவுக்கு ஆதரவுக்கரம் நீட்டியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’ஜெய்பீம்’ திரைப்படம் வெளியான முதல்நாள் நாம் தமிழர் கட்சியின் சீமான் அந்த படத்தை பாராட்டி இரண்டு பக்கங்களில் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது சூர்யாவுக்கு மிரட்டல் வந்து கொண்டிருக்கும் நிலையில் சீமான் தரப்பிலிருந்து சூர்யாவுக்கு ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சீமான் இது குறித்து கூறிய போது ’குறிப்பிட்ட சமூக மக்களின் வலியை வெளிப்படுத்துவதற்காக எடுத்து, இன்னொரு சமூக மக்களுக்கு வலியை ஏற்படுத்தக் கூடாது என்றும், சூர்யா அதை தவிர்த்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து சூர்யா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட இதே கருத்தை தான் நடிகர் சந்தானமும் சமீபத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos