close
Choose your channels

நாம் தமிழர் கட்சி சீமான் திடீர் மயக்கம்: மருத்துவமனையில் அனுமதி!

Saturday, April 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் நடிகரும் இயக்குனருமான சீமான் திடீரென செய்தியாளர் சந்திப்பின் போது மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

சென்னை திருவொற்றியூர் அருகே சுரங்கப்பாதை கட்டும் பணி நடைபெற்று வருவதால் அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளை அகற்றும் பணியில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மக்களுக்கு ஆதரவான போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.

அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். இதனையடுத்து அந்த பகுதியில் உள்ள காவல் துறையினர் உடனடியாக 108 ஆம்புலன்சை வரவழைத்து நாம் தமிழர் கட்சி சீமானை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது சீமான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன .

நாம் தமிழர் கட்சியின் சீமான் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் விரைவில் அறிக்கை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos