close
Choose your channels

சசிகலாவிடம் பலமுறை சொல்லிவிட்டேன்...! இது அவமானகரமானது.....சீமான் கருத்து....!

Tuesday, July 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

 

ஆடியோ அரசியல் பற்றி சசிகலாவிடம் பலமுறை சொல்லிவிட்டேன், ஆனால் நாகரிகமில்லாமல் அவர் நடந்துகொள்கிறார் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த சீமான் இதுகுறித்து  கூறியிருப்பதாவது,

"சசிகலா வெளியிடும் ஆடியோக்களை ரசிக்க முடியாது. இதை ஏற்கவும் முடியாது, சரியான முறையாகவும் இது இல்லை. தலைவர் என நினைத்து தொண்டர்கள் அவரிடம் தொலைபேசியில் பேசுகிறார்கள். ஆனால் நாகரீகமில்லாமல் சசிகலா அதை வெளியிடுகிறார். போன்காலை பதிவு செய்து, பொது ஊடகங்களில்  இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது தலைமைப்பண்பு-க்கு சரியானது அல்ல. இச்செயல் அவமானத்திற்குரியது.

தொண்டர்களை நேரடியாக அழைத்து, அவர்களிடம் பொது இடங்களில் பேசுங்கள். ஆடியோக்கள் வெளியிட  வேண்டாம் என நான் சசிகலா-விடம் பலமுறை சொல்லியுள்ளேன். ஆனால் அது தொடரத்தான் செய்கிறது.

உளவுத்துறை இது போன்ற விஷயங்களை பதிவு செய்யும், ஆனால் வெளியில் விடாது. இப்படி செய்யும் செயல் மிகவும் மோசமானது" என சீமான் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos