முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன் பிரபல இயக்குனர் வைத்த கோரிக்கை

  • IndiaGlitz, [Wednesday,March 15 2017]

'தென்மேற்கு பருவக்காற்று', 'நீர்ப்பறவை', 'தர்மதுரை' உள்ளிட்ட தரமான படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் சீனுராமசாமி சமீபத்தில் தமிழக முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமியிடம் முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். அவர் வைத்துள்ள கோரிக்கையின் விபரம் பின்வருமாறு:

வெளிநாடுகளில் திரைப்படம் எடுக்க பல அழைப்புகள் வருகின்றன.
அந்த அழைப்பில் எங்கள் நாட்டில் படம் எடுங்கள், எங்கள் கலாச்சாரத்தை உலகிற்கு காட்டுங்கள், படப்பிடிப்பு செலவில் பாதி தருகிறோம் என்று கூறுகின்றனர். ஆனால் இங்கு, நாங்கள் வாழும் நாட்டில், எங்கள் மக்கள் வாழும் பகுதிகளை, திரையில் காட்ட அனுமதி இல்லை. விடுமுறை நாட்களில் பாதுகாப்பாக அரசு நிறுவனங்கள், கல்லூரி, சட்டமன்றம், அருங்காட்சியகம், கோர்ட், மருத்துவமனை இன்னபிற வாழ்வியல் களங்கள் அனுமதியில்லை. தமிழக அரசு இதற்கு அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்.

வாழ்வியல் படங்கள் எடுக்க விரும்பும் என் போன்றோர் நாங்கள் வாழ்ந்த இடங்களை பதிவு செய்ய அனுமதி வேண்டும். இவ்வாறு இயக்குனர் சீனுராமசாமி தனது கோரிக்கையாக முதல்வரிடம் தெரிவித்துள்ளார்.

More News

பாடகி சுசித்ரா எங்கே?

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபல பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு அதில் கோலிவுட் பிரபலங்களின் சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியாகின. ஹேக்கர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பக்கத்தில் வெளியான வீடியோவினால் கோலிவுட் திரையுலகில் இதுவரை ஏற்படாத பரபரப்பு ஏற்பட்டது...

ரஜினியால் தூக்கத்தை தொலைத்த 'மாநகரம்' இயக்குனர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திரையுலகிற்கு புதியதாக வரும் திறமைசாலிகளை பாராட்டி அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதில் எந்தவித தயக்கமும் இல்லாதவர்.

கமல்ஹாசன் உருவ பொம்மையை எரிக்க முயற்சி! 3 பேர் கைது

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் திரையுலகிற்காகவே பிறந்தவர். இரண்டு மூன்று படங்கள் நடித்த நடிகர்கள் கூட ஓட்டல், ரியல் எஸ்டேட் என சம்பாதித்த பணத்தை வேறு துறைகளில் முதலீடு செய்து வரும் நிலையில் 50 ஆண்டுகளாக சினிமாவில் தன்னுடைய உழைப்பில் கிடைத்த பணம் முழுவதையும் சினிமாவுக்காக மட்டுமே செலவு செய்யும் ஒரே நடிகர்.

தொலைஞ்சு போங்கடா!! ஸ்ரீப்ரியா குறிப்பிட்டது யாரை?

பழம்பெரும் நடிகை ஸ்ரீப்ரியா தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது ஆக்கபூர்வமான கருத்துக்களை பகிர்ந்து வருபவர் என்பது அனைவரும் அறிந்ததே.