விமானத்தில் பர்ஸை தொலைத்துவிட்ட செல்வராகவன்.. அரை மணி நேரத்தில் நடந்த அதிசயம்..!

  • IndiaGlitz, [Wednesday,August 02 2023]

நடிகர் மற்றும் இயக்குனர் செல்வராகவன் மதுரையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்து கொண்டிருந்த போது அவர் தனது பர்ஸை தொலைத்து விட்டதாகவும் ஆனால் அரை மணி நேரத்தில் அதிசயம் ஏற்பட்டு தனது பர்ஸ் கிடைத்துவிட்டது என்றும் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

தமிழ் திரை உலகின் பிரபல இயக்குனர் செல்வராகவன் என்பதும் அவர் கடந்த சில ஆண்டுகளாக நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார் என்பதும் தெரிந்ததே. தற்போது அவர் விஷாலின் ’மார்க் ஆண்டனி’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் தனுஷ் இயக்கி நடிக்கும் 'D50’ என்ற திரைப்படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார்

இந்த நிலையில் சமீபத்தில் மதுரையிலிருந்து சென்னைக்கு ஏர் இந்தியா விமானத்தில் செல்வராகவன் பயணம் செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென அவரது பர்ஸ் தொலைந்து விட்டது. இதனை அடுத்து ஏர் இந்தியா அலுவலகத்தில் அவர் புகார் அளித்த நிலையில் அரைமணி நேரத்தில் அவரது பர்ஸ் கிடைத்து விட்டதாக ஏர் இந்தியா அவருக்கு தகவல் அனுப்பியது. இதனை அடுத்து அவர் ஏர் இந்திய அலுவலகம் சென்று தனது பர்ஸை பெற்றுக் கொண்டதாக சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்

மேலும் சில நிமிடங்களில் தனது பர்ஸை கண்டுபிடித்து கொடுத்த ஏர் இந்தியா நிர்வாகத்திற்கு தனது நன்றியையும் அவர் தெரிவித்துள்ளார்..

More News

ரஜினி படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படம்.. பான் - இந்திய நடிகர் ஹீரோவா

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய் நடித்து வரும் 'லியோ' திரைப்படத்தை இயக்கி முடித்துள்ள நிலையில் இந்த படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது.

ஓடிடியில் 1.2 மில்லியன் பார்வைகள்..  உலகளவில் சாதனை படைத்த மாமன்னன் !!

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில், சமூக நீதி பேசும் மாபெரும் படைப்பாக உருவான

நடிகை கங்கனா ரனாவத்திற்கு ஒய்-பிளஸ் பாதுகாப்பு? சர்ச்சை ஆனதால் விளக்கம்!!

இந்திய சினிமாவில் கவனிக்கப்படும் நடிகைகளுள் ஒருவராக இருந்துவரும் நடிகை கங்கனா ரனாவத்திற்கு மத்திய அரசால் ஒய்-பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது

6 முறை தேசிய விருது பெற்ற கலை இயக்குனர் தற்கொலை.. அதிர்ச்சியில் திரையுலகம்..!

 6 முறை தேசிய விருது பெற்ற பிரபல பாலிவுட் கலை இயக்குனர்  நிதின் தேசாய் என்பவர் திடீரென தற்கொலை செய்து கொண்டது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

விமல் நடித்த 'துடிக்கும் கரங்கள்': ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

தமிழ் திரையுலகில் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான விமல் நடித்த 'துடிக்கும் கரங்கள்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.