சூர்யாவிடம் வருத்தம் தெரிவித்த செல்வராகவன்

  • IndiaGlitz, [Monday,July 24 2017]

பிரபல நடிகர் சூர்யா நேற்று தனது 42வது பிறந்த நாளை வெகுசிறப்பாக கொண்டாடினார் என்பதையும் அவருக்கு ஒட்டுமொத்த திரையுலகினர்களும் வாழ்த்து மழை பொழிந்தனர் என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் ஒருநாள் தாமதமாக இன்று இயக்குனர் செல்வராகவன், சூர்யாவுக்கு தனது சமூக வலைத்தளத்தின் மூலம் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்
தற்போது ஆர்மேனியா நாட்டில் சந்தானம் நடித்து வரும் 'மன்னவன் வந்தானடி' படப்பிடிப்பில் இருப்பதாகவும், அவர் இருக்கும் பகுதியில் நெட்வொர்க் சரியில்லாததால் தன்னால் குறித்த நேரத்தில் சூர்யாவுக்கு வாழ்த்து கூற முடியவில்லை என்றும் அதற்காக தான் வருந்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே எஸ்.ஜே.சூர்யா நடித்த 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தை இயக்கி முடித்துவிட்ட செல்வராகவன், தற்போது 'மன்னவன் வந்தானடி' படத்தின் படப்பிடிப்பில் உள்ளார். சந்தானம், ஆதித்தி போஹன்கர் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு யுவன்ஷங்அக்ர் ராஜா இசையமைத்து வருகிறார்.

More News

தமிழக அரசியலில் திரைநட்சத்திரங்கள் பெற்ற வெற்றி தோல்விகள்

இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் எப்படியோ, தமிழகத்தை பொறுத்தவரை கடந்த ஐம்பதாண்டு அரசியல் வரலாற்றை புரட்டி பார்த்தால் அதில் திரையுலகினர்களின் பங்கு மிக அதிகம்.

குண்டர் சட்டத்தை அடுத்து பல்கலையில் இருந்தும் நீக்கப்பட்ட வளர்மதி

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவி வளர்மதி சமீபத்தில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இதழியல் துறை முதலாம் ஆண்டு மாணவியான வளர்மதி, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மாணவர்களிடமும் பொதுமக்களிடமும் துண்டு பிரசரம் விநியோகித்ததால் கைது செய்யப்பட்டதாக அ

தோல்வி அடைந்தாலும் மக்களின் மனங்களை வென்ற இந்திய வீராங்கனைகள்

நேற்று நடைபெற்ற மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தாலும் கடைசி வரை வெற்றிக்காக போராடிய வீராங்கனைகளின் மன உறுதியால் கிரிக்கெட் ரசிகர்களின் மனங்களை வென்றுவிட்டனர்....

சென்னை கல்லூரி மாணவிகள் 105 பேர் திடீரென மருத்துவமனையில் அனுமதி

சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு கல்லூரியில் விடுதியில் தங்கியிருந்த 105 மாணவிகளுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்...

மலையாள நடிகை பாலியல் வழக்கு விவகாரம்: திலீப் ஜாமீன் மனு குறித்து கேரள ஐகோர்ட் முக்கிய உத்தரவு

கடந்த பிப்ரவரி மாதம் பிரபல மலையாள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவுக்கு உள்ளான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் திலீப்பின் ஜாமின் மனு இன்று மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.