close
Choose your channels

சூர்யாவிடம் வருத்தம் தெரிவித்த செல்வராகவன்

Monday, July 24, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகர் சூர்யா நேற்று தனது 42வது பிறந்த நாளை வெகுசிறப்பாக கொண்டாடினார் என்பதையும் அவருக்கு ஒட்டுமொத்த திரையுலகினர்களும் வாழ்த்து மழை பொழிந்தனர் என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் ஒருநாள் தாமதமாக இன்று இயக்குனர் செல்வராகவன், சூர்யாவுக்கு தனது சமூக வலைத்தளத்தின் மூலம் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்
தற்போது ஆர்மேனியா நாட்டில் சந்தானம் நடித்து வரும் 'மன்னவன் வந்தானடி' படப்பிடிப்பில் இருப்பதாகவும், அவர் இருக்கும் பகுதியில் நெட்வொர்க் சரியில்லாததால் தன்னால் குறித்த நேரத்தில் சூர்யாவுக்கு வாழ்த்து கூற முடியவில்லை என்றும் அதற்காக தான் வருந்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே எஸ்.ஜே.சூர்யா நடித்த 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தை இயக்கி முடித்துவிட்ட செல்வராகவன், தற்போது 'மன்னவன் வந்தானடி' படத்தின் படப்பிடிப்பில் உள்ளார். சந்தானம், ஆதித்தி போஹன்கர் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு யுவன்ஷங்அக்ர் ராஜா இசையமைத்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.