நான்கு வருடங்களாக முடங்கி இருக்கும் படத்தை தூசு தட்டும் சந்தானம்: விரைவில் ரிலீஸ்!

காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக பதவி உயர்வு ஆனபின் சந்தானம் ஹீரோவாக நடிக்க ஒப்புக் கொண்ட படங்களில் ஒன்று ’மன்னவன் வந்தானடி’. பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வந்த இந்த திரைப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டிலேயே 80 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டது.

ஆனால் திடீரென ஒரு சில காரணங்களால் இந்த படத்தின் படப்பிடிப்பு அதற்கு மேல் தொடரவில்லை. இந்த நிலையில் தற்போது பிரபல தயாரிப்பாளர் வருண்மணியன் இந்த படத்தை கைப்பற்றியுள்ளதாகவும், இதனை அடுத்து அவர் மீதி உள்ள 20% படப்பிடிப்பை தொடங்க முயற்சித்து வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

இந்த படத்தை மீண்டும் தொடங்கினால் அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க தயார் என சந்தானமும் கூறியுள்ளதாக தெரிகிறது. எனவே விரைவில் இந்த படத்தின் 20 சதவிகித படப்பிடிப்பை முடித்துவிட்டு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் தயாராகி வருகின்றனர். எனவே செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடித்த ’மன்னவன் வந்தானடி’ படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்தானம், ஆதித்தி போங்கர், ஆடுகளம் நரேன், அருள்தாஸ், ஊர்வசி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். லோகநாதன் ஸ்ரீனிஆசன் ஒளிப்பதிவில், பிரசன்னா படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

வாட்ஸ் அப்பில் கடைசி ஸ்டேட்டஸ்: அரசுப்பள்ளி ஆசிரியை தூக்கில் தொங்கி தற்கொலை

தான் யாருக்கும் பாரமாக இருக்க போவதில்லை என வாட்ஸ்அப்பில் கடைசியாக ஒரு ஸ்டேட்டஸை பதிவு செய்துவிட்டு அரசுப்பள்ளி ஆசிரியை ஒருவர் தூக்கில் தொங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

பாம்பை அசால்ட்டாக பிடித்து பக்கெட்டில் போட்ட தமிழ் நடிகை: வைரலாகும் வீடியோ 

வீட்டுக்குள் வந்த பாம்பை பிடித்து அதை ஒரு பக்கெட்டில் போட்ட தமிழ் நடிகை ஒருவரின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது

வெளிநாட்டுக்கு செல்கிறதா 'பொன்னியின் செல்வன்' படக்குழு? பரபரப்பு தகவல் 

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் 'பொன்னியின் செல்வன்' என்ற பிரம்மாண்டமான திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தாய்லாந்தில் உள்ள அடர்ந்த காட்டில் நடந்தது.

ஆண்ட்ரியாவும் இல்லை, ராஷிகண்ணாவும் இல்லை: 'அரண்மனை 3' படத்தில் பேய் யார்?

சுந்தர் சி இயக்கிய 'அரண்மனை' மற்றும் 'அரண்மனை 2' ஆகிய இரண்டு திரைப்படங்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் இயக்கி வரும் திரைப்படம்

கார் பைக்கை அடுத்து சிலம்பம் கற்கும் பிக்பாஸ் நடிகை

இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் பல நடிகர் நடிகைகள் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருந்து கொண்டே கவர்ச்சியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை குஷி ஆக்கி வந்தனர்.