close
Choose your channels

பாம்பை அசால்ட்டாக பிடித்து பக்கெட்டில் போட்ட தமிழ் நடிகை: வைரலாகும் வீடியோ 

Thursday, September 3, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வீட்டுக்குள் வந்த பாம்பை பிடித்து அதை ஒரு பக்கெட்டில் போட்ட தமிழ் நடிகை ஒருவரின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

பிரபல தயாரிப்பாளர் அருண்பாண்டியன் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியன், தனது வீட்டில் திடீரென ஒரு பாம்பு இருந்ததை கண்டார். உடனே அந்த பாம்பை அவர் பயமின்றி பிடித்து ஒரு பக்கெட்டில் போட்டு வெளியே கொண்டு சென்றார். இது குறித்த வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும், இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்ற நிலையில் தமிழ் நடிகை ஒருவர் அசால்டாக பாம்பை பிடித்து பக்கெட்டில் போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தும்பா என்ற திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமான நடிகை கீர்த்தி பாண்டியன், தற்போது ஹெலன் என்ற மலையாள படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்த படத்தை ’இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ பட இயக்குனர் கோகுல் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் அருண் பாண்டியனும் நடிக்க உள்ளார் என்பதும் படத்திலும் இவர்கள் இருவரும் அப்பா மகள் கேரக்டரில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.