'2.0' வெற்றி: ரசிகர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி சொன்ன ஷங்கர்

  • IndiaGlitz, [Friday,November 30 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் நேற்று வெளியான '2.0' படத்தின் முதல் நாள் வசூல் பல சாதனைகளை தகர்த்தெறிந்துள்ளது. அனைத்து பத்திரிகைகளும், கோலிவுட் பிரபலங்களும் இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்து வருவதால் முதல் நாளே இந்த படம் வெற்றிப்படம் என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது.

இந்த நிலையில் '2.0' படத்தை வெற்றிப்படமாக்கிய ரசிகர்களுக்கு இயக்குனர் ஷங்கர் தனது சமூக வலைத்தள பக்கத்தின் மூலம் நெகிழ்ச்சியான நன்றியை தெரிவித்துள்ளார். 2.0 படத்தை ரசித்து ஊக்குவித்து கொண்டாடி அதை மிகப்பெரிய வெற்றிப்படமாக்கிய ரசிகர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி. இந்த படத்தை ஆதரித்த ஊடகங்களுக்கும் எங்கள் குழுவின் கடின உழைப்பை மதித்தவர்களுக்கும் நன்றி. 2.0 படத்துக்காக தங்கள் வாழ்வின் ஒரு பகுதியை செலவிட்ட எனது ஒட்டுமொத்த குழுவினருக்கும் நன்றி என ஷங்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் '2.0' படத்தை பாராட்டிய திரையுலக பிரபலங்களின் டுவீட்டுக்கு தனித்தனியே அவர் நன்றி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

சிம்புவின் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிம்பு நடித்த 'செக்க சிவந்த வானம்' சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து அவர் நடித்து வரும் அடுத்த படம் 'வந்தா ராஜாவாதான் வருவேன்'. இயக்குனர் சுந்தர் சி இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு

ரியல் பக்சிராஜா யார் என்று தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் நேற்று வெளியாகி பல வசூல் சாதனைகளை முறியடித்து வருகிறது.

பிரபல இரட்டை இயக்குனர்களில் ஒருவர் காலமானார்.

தமிழ் சினிமாவில் மிக அரிதாக இருந்த இரட்டை இயக்குனர்களில் ராபர்ட்-ராஜசேகர் குறிப்பிடத்தக்கவர்கள்.

வெள்ள நிவாரணப்பணி: நிதி அனுப்ப வேண்டிய மத்திய அரசு பில் அனுப்பிய கொடுமை!

கடந்த சில மாதங்களுக்கு முன் கேரள மாநிலத்தில் வரலாறு காணாத கனமழை மற்றும் பெருவெள்ள, ஏற்பட்டு பெரும் உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டது

நான் என்ன சாதின்னு தேடி கண்டுபிடிங்கடா....ரித்விகா ஆவேசம்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் வின்னர் ரித்விகாவுக்கு ஒருபக்கம் வாழ்த்துக்கள் குவிந்து வந்தாலும் இன்னொரு பக்கம் அவர் குறிப்பிட்ட சாதி