அடுத்தவனை கேலி பண்ணா பத்தாது: கொஞ்சம் பொறுப்பா இருங்க: நடிகர் சாந்தனு

அடுத்தவர்களை கேலியும் கிண்டலும் செய்தால் மட்டும் பத்தாது, கொஞ்சம் பொறுப்பாகவும் இருக்க வேண்டும் என்று நடிகர் சாந்தனு தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். 

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500 தாண்டியுள்ள நிலையில் இதுகுறித்து அதிர்ச்சியுடன் நடிகர் சாந்தனு ஒரு பதிவை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்டோர் ஒரே நாளில் கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டுள்ள செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். இதில் பெரும்பாலும் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் அதிர்ச்சி ஆகும். நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் என்பதே தெரியவில்லை.

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் அடுத்தவர்களை கேலி கிண்டல் செய்தால் மட்டும் பத்தாது. நாம் ஒவ்வொருவரும் பொறுப்புடன் இருந்து, இந்த நோயை எதிர்க்க என்ன செய்ய வேண்டுமென்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். நடிகர் சாந்தனு கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார் என்பதை அடுத்தே சாந்தனுவிடம் இருந்து இந்த டுவீட் பதிவு செய்யப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.

More News

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேர்களுக்கு கொரோனா தொற்று: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக வெளிவந்துள்ள தகவல் அதிர்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

கொரோனா தடுப்பு நிதியாக ரூ.9 கோடி வழங்கிய பிரபல திரைப்பட கதாசிரியர்!

இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு துறையினர் கோடிக்கணக்கில் நிதியுதவி செய்து வருகின்றனர்.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? முக்கிய தகவல்

10ஆம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் 27ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மார்ச் 24 ஆம் தேதியே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால்

அசாம் மாநிலத்தில் பரவிவரும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்!!! கொத்துக் கொத்தாக செத்து மடியும் பன்றிகள்!!!

இந்தியாவில் ஆப்பிக்கப் பன்றிக்காய்ச்சல் நோய்த்தொற்று முன்னெப்போதும் பரவாத நிலையில் தற்போது அசாம் மாநிலத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மக்களுக்கு அரசு செய்யும் துரோகம் இது: கமல்ஹாசன் ஆவேசம்

உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் அவ்வப்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் அரசுக்கு எதிரான கருத்துக்களை ஆவேசமாக தெரிவித்து வருகிறார் என்பதும் இந்த கருத்துக்கள் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது