துலாபார நிகழ்ச்சியின்போது மண்டை உடைந்தது: காங்கிரஸ் வேட்பாளர் காயம்!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் சசிதரூர் துலாபார நிகழ்ச்சியின்போது காயமடைந்தார்.

திருவனந்தபுரம் தொகுதியின் வெற்றிக்காக கடந்த சில நாட்களாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் சசிதரூர் சற்றுமுன் திருவனந்தபுரத்தில் உள்ள காந்தாரி அம்மன் கோவிலில் நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டார். பின்னர் எடைக்கு எடை அரிசி, பழம், சர்க்கரை ஆகியவை காணிக்கை வழங்கும் துலாபாரம் சடங்கில் கலந்து கொண்டார். இந்த துலாபார நிகழ்வின் போது எதிர்பாராத வகையில் எடை தராசு சசிதரூர் தலையில் விழுந்தது. இதனால் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது

உடனடியாக காயம் அடைந்த சசிதரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு 11 தையல்கள் போடப்பட்டுள்ளதாகவும், ஆபத்தான காயம் எதுவும் அவருக்கு இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

திருவனந்தபுரம் தொகுதியில் சசிதரூரை எதிர்த்து பாஜக வேட்பாளராக கும்மனம் ராஜசேகரன் என்பவரும் சி.பி.ஐ.(எம்) வேட்பாளராக திவாகரன் என்பவரும் போட்டியிடுகின்றனர். சசிதரூர் ஏற்கனவே இதே தொகுதியில் தொடர்ச்சியாக இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஒரே ஒரு வார்த்தை: பலாத்காரம் செய்ய வந்த வாலிபரை தலைதெறிக்க ஓடவிட்ட பெண்!

பாலியல் பலாத்காரம் செய்ய வந்த வாலிபர் ஒருவரை ஒரே ஒரு வார்த்தை கூறி தலை தெறிக்க ஓட வைத்த பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

ஒருதலைக்காதல்; ஐடி இளம்பெண்ணை கத்தியால் குத்திய சென்னை வாலிபர் கைது!

சென்னையில் இளம் பெண்ணை, 15 இடங்களில் கத்தியால் குத்திய ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை வருகின்றனர்.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து நாட்டில் வரும்  மே 30-ம் தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

ஒரு நிமிடம் முழுசா பேச முடியல: 6 கட் விஜயகாந்த் வெளியிட்ட வீடியோவை கண்டு கலங்கும் ரசிகர்கள்!

தமிழகத்தில், தற்போது நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் பரபரப்&#

துப்பாக்கியை எடுக்கவும் தயாராக இருக்கிறேன்! பாஜக பிரச்சார கூடத்தில் தூள் கிளப்பிய பிரபல நடிகர்!

தமிழகத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...