close
Choose your channels

ஒருதலைக்காதல்; ஐடி இளம்பெண்ணை கத்தியால் குத்திய சென்னை வாலிபர் கைது!

Monday, April 15, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையில் இளம் பெண்ணை, 15 இடங்களில் கத்தியால் குத்திய ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கத்தியால் குத்திய இளைஞர், அந்த இளம் பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்ததாக தகவல் வெளிவந்துள்ளது.

சென்னை திருவான்மியூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஐடியில் பணிபுரிந்து வந்தார். இவர் தனது வீட்டின் அருகே வாலிபர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். இந்த நிலையில் திடீரென அந்த வாலிபர் இளம்பெண்ணை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதனால் அந்த இளம்பெண் ரத்த வெள்ளத்தில் மிதந்தார்.

இதனைப்பார்த்த அந்த பகுதி மக்கள் அந்த இளைஞனை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த இளம்பெண்ணை மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில் போலீசார் அந்த இளைஞனை விசாரித்தபோது அவரது பெயர் கெவின் என்றும், இளம்பெண்ணுடன் கல்லூரியில் படித்தவர் என்றும் பல ஆண்டுகளாக ஒருதலையாக காதலித்து வந்த இவர், தன்னை திருமணம் செய்யும்படி வற்புறுத்தியதாகவும், ஆனால் இளம்பெண் அதற்கு ஒப்புக்கொள்ளாததால் ஆத்திரத்தில் கத்தியால் குத்தியதாகவும் தெரிய வந்தது.

படுகாயம் அடைந்த இளம்பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.