எகிப்து பிரமிடுகளுக்கு நிகரான அதிசயங்கள்: காளகஸ்தி கோவில் குறித்து தமிழ் நடிகை!

  • IndiaGlitz, [Wednesday,September 15 2021]

தமிழ் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பிரபலமான இருந்தவர் நடிகை ஸ்ரேயா சரண் என்பது தெரிந்ததே. ரஜினிகாந்த் நடித்த ’சிவாஜி’, தளபதி விஜய் நடித்த ’அழகிய தமிழ் மகன்’, தனுஷ் நடித்த ’திருவிளையாடல் ஆரம்பம்’ விக்ரம் நடித்த’ ’கந்தசாமி’ உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது அவர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கி வரும் ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் நடிகை ஸ்ரேயா சரண் கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்ய டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் ஸ்ரேயா சரண், தனது கணவருடன் இணைந்து எடுத்த புகைப்படங்கள் மற்றும் ஜாலியான வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருவார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது அவர் பக்தி சுற்றுலா சென்றுள்ளார். கணவருடன் ஆந்திர மாநிலத்தில் உள்ள காளகஸ்தி கோவிலுக்கு சென்ற அவர் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். மேலும் அதில் இந்த காளகஸ்தியில் உள்ள சிவன் கோயில் மிகவும் அற்புதமானது என்றும், எகிப்து மற்றும் மாயன் காலத்திலிருந்த பிரமிடுகளுக்கு நிகராக இந்த கோவிலிலும் அதிசயங்கள் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

More News

ரசிகர்களை கிறங்க வைக்கும் கீர்த்தி பாண்டியனின் கிளாமர் புகைப்படங்கள்!

பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண்பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் 'அன்பிற்கினியாள்' என்ற திரைப்படத்தில் நடித்தார் என்பதும் இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது

நயன்தாரா வீட்டில் நடந்த விசேஷ நிகழ்ச்சியில் விக்னேஷ் சிவன்: வைரல் புகைப்படங்கள்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வீட்டில் நடந்த விஷயம் ஒன்றில் இயக்குனர் விக்னேஷ் சிவன் கலந்துகொண்ட புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. 

'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் நடிக்கும் அனிருத்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'

நமது உறுதியற்ற நிலைப்பாடே காரணம்: நீட் மரணம் குறித்து பா ரஞ்சித்

கடந்த ஞாயிறு அன்று தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது என்பதும் இந்த தேர்வுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது என்பதும் தெரிந்ததே .

இரட்டையர்களால் நிரம்பிய அதிசய கிராமம்? விழிபிதுங்கும் விஞ்ஞானிகள்!

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கொடின்ஹி எனும் கிராமத்தில் பிறக்கிற பெரும்பாலான குழந்தைகள்