close
Choose your channels

எகிப்து பிரமிடுகளுக்கு நிகரான அதிசயங்கள்: காளகஸ்தி கோவில் குறித்து தமிழ் நடிகை!

Wednesday, September 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பிரபலமான இருந்தவர் நடிகை ஸ்ரேயா சரண் என்பது தெரிந்ததே. ரஜினிகாந்த் நடித்த ’சிவாஜி’, தளபதி விஜய் நடித்த ’அழகிய தமிழ் மகன்’, தனுஷ் நடித்த ’திருவிளையாடல் ஆரம்பம்’ விக்ரம் நடித்த’ ’கந்தசாமி’ உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது அவர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கி வரும் ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் நடிகை ஸ்ரேயா சரண் கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்ய டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் ஸ்ரேயா சரண், தனது கணவருடன் இணைந்து எடுத்த புகைப்படங்கள் மற்றும் ஜாலியான வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருவார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது அவர் பக்தி சுற்றுலா சென்றுள்ளார். கணவருடன் ஆந்திர மாநிலத்தில் உள்ள காளகஸ்தி கோவிலுக்கு சென்ற அவர் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். மேலும் அதில் இந்த காளகஸ்தியில் உள்ள சிவன் கோயில் மிகவும் அற்புதமானது என்றும், எகிப்து மற்றும் மாயன் காலத்திலிருந்த பிரமிடுகளுக்கு நிகராக இந்த கோவிலிலும் அதிசயங்கள் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.